வெலிசர கடற்படை வளாகத்தில் உள்ள கடற்படை திருமன இல்லங்களுக்கு சேவா வனிதா பிரிவு மூலம் தினசரி நுகர்வோர் பொருட்களை வழங்கும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது

கடற்படை சேவா வனிதா பிரிவின் தளபதியான திருமதி சந்திமா உலுகேதென்னவின் கருத்தின்படி, வெலிசர கடற்படை வளாகத்தில் உள்ள கடற்படை திருமண இல்லங்களில் வசிக்கும் கடற்படை குடும்பங்களின் உறுப்பினர்களுக்கு அன்றாட தேவைகளை வழங்கும் திட்டமொன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது.

COVID - 19 தொற்றுநோயின் தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்தவரை, வெலிசர கடற்படை வளாகத்தில் உள்ள திருமண வீடுகளில் வசிக்கும் கடற்படை குடும்பங்களின் உறுப்பினர்கள் வெளி சந்தையில் இருந்து தங்கள் அன்றாட நுகர்வு தேவைகளை பூர்த்தி செய்வது கடினமானது. அதன்படி, இந்த திட்டத்தால், கடற்படை வளாகத்தில் அமைந்துள்ள சேவா வனிதா நலன்புரி நிலயம் மூலம் கடற்படை திருமன இல்லங்களுக்கு தேவையான அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களை தள்ளுபடி விலையில் வழங்கப்படும்.