வடமேற்கு கடற்படை கட்டளையின் புதிய சேவா வனிதா நலத்திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டன

கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் கருத்தின் மற்றும் வழிகாட்டுதலின் கீழ், கடற்படை உறுப்பினர்களின் நலனுக்காக சேவா வனிதா பிரிவு மூலம் இலங்கை கடற்படை கப்பல் பரண நிறுவனத்தில் புதிய தோற்றத்துடன் நிறுவிய நலன்புரி நிலையத்தை மற்றும் இலங்கை கடற்படை கப்பல் தம்பப்பன்னி நிருவன வளாகத்தில் நிறுவிய நலன்புரி நிலையம் மற்றும் அபான்ஸ் நிலையம் 2021 ஏப்ரல் 08 ஆம் திகதி கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவியால் திறந்துவைக்கப்பட்டன.

வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் எஸ்.பி.சேனரத்ன, வடமேற்கு கடற்படை கட்டளைத் துணைத் தளபதி கொமடோர் பிரசாத் காரியப்பெரும, சேவா வனிதா குழுவின் உறுப்பினர் திருமதி பிரியங்கா செனவிரத்ன, கொடி அதிகாரிகள், மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் மற்றும் சேவா வனிதா பிரிவின் உறுப்பினர்கள் இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.


இலங்கை கடற்படை கப்பல் பரண நிருவனத்தில் நிறுவப்பட்ட நலன்புரி நிலையத்தை புதிய தோற்றத்துடன் ஆரம்பித்து வைப்பு


இலங்கை கடற்படை கப்பல் தம்பப்பன்னி நிருவன வளாகத்தில் நிறுவிய சேவா வனிதா நலன்புரி நிலையம் திறந்து வைப்பு


இலங்கை கடற்படை கப்பல் தம்பப்பன்னி நிருவன வளாகத்தில் நிறுவிய அபான்ஸ் நிலையம் திறந்து வைப்பு