நிகழ்வு-செய்தி

கப்பல் உரிமையாளர்கள் மற்றும் இயக்குபவர்களுக்கு பாதுகாப்பான கடல்வழிப் போக்குவரத்து சேவைக்காகப் கடற்படையினால் பயிற்சி அளிக்கப்படுகிறது

இலங்கை கடற்படையானது, பாதுகாப்பான மற்றும் திறமையான கடல்வழிப் பயணிகள் போக்குவரத்துச் சேவையை வழங்கும் நோக்கில், கடலோரக் காவல் திணைக்களத்துடன் இணைந்து, பயணிகள் படகு உரிமையாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்காக 2026 ஏப்ரல் 17 அன்று யாழ்ப்பாணம், குரிக்கட்டுவான் இறங்குத் துறையில் ஓர் விழிப்புணர்வூட்டும் அமர்வை வெற்றிகரமாக நடத்தியது.

20 Apr 2026

நல்லெண்ணப் பயணத்திற்காகத் தீவிற்கு வந்த இந்தோனேசிய கடற்படையின் 'KRI BIMA SUCI - 945' என்ற பாய்மரக் கப்பல் தீவிலிருந்து புறப்பட்டது

2026 ஏப்ரல் 15 ஆம் திகதி நல்லெண்ணப் பயணமாக தீவிற்கு வந்த இந்தோனேசிய கடற்படையின் 'KRI BIMA SUCI - 945' என்ற பாய்மரக் கப்பல், தனது நல்லெண்ணப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து, 2026 ஏப்ரல் 18 ஆம் திகதி தீவிலிருந்து புறப்பட்டது. இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினரின் பாரம்பரிய முறைப்படி கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.

19 Apr 2026

இலங்கை மற்றும் இந்தோனேசிய கடற்படைகளின் பங்கேற்புடன், கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் கடற்படை மரபுகளை வெளிப்படுத்தும் வகையில் காலி முகத்திடலில் ஒரு பிரம்மாண்டமான நகர அணிவகுப்பு நடைபெற்றது

நல்லெண்ணப் பயணமாகத் தீவிற்கு வருகை தந்த இந்தோனேசியக் கடற்படையின் 'KRI BIMA SUCI - 945' என்ற பாய்மரக் கப்பலின் குழுவினர் மற்றும் இலங்கைக் கடற்படையினரின் பங்கேற்புடன், 2026 ஏப்ரல் 16 அன்று காலி முகத்திடலில் ஒரு பிரம்மாண்டமான கலாச்சார நிகழ்ச்சியும் நகர அணிவகுப்பும் நடைபெற்றது.

18 Apr 2026

கடற்படையின் CBRN பிரிவுகளுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்ட அமெரிக்க எரிசக்தித் துறை பிரதிநிதிகள் குழு

அமெரிக்க எரிசக்தித் துறையின் தேசிய அணுசக்திப் பாதுகாப்பு நிர்வாகத்தின் பிரதிநிதிகள் சிறப்பு படகு படைப்பிரிவுத் தலைமையகம் உட்பட, இலங்கை கடற்படையின் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (CBRN) பதிலளிப்புப் பிரிவை ஆய்வு செய்தனர். இது 2026 மார்ச் 27 முதல் 30 வரை நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது, அவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட அணுக்கடத்தலைக் கண்டறிந்து தடுப்பதற்கான உபகரணங்களின் செயல்திறனும் கண்காணிக்கப்பட்டது.

16 Apr 2026

வடக்குப் பிராந்தியத்தில் உள்ள மீனவ சமூகத்தினரின் பங்கேற்புடன், கடற்படை உயிர் காத்தல் மற்றும் அடிப்படை முதலுதவித் திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது

இலங்கைக் கடற்படையானது, கடலோரக் காவல்படை மற்றும் மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களத்துடன் இணைந்து, 2026 ஏப்ரல் 09 அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள மைலடி மீன்பிடித் துறைமுகத்தில், மீனவ சமூகத்தினரின் பங்கேற்புடன், கடலில் உயிர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அத்தியாவசிய உயிர் காத்தல் மற்றும் அடிப்படை முதலுதவி குறித்த விழிப்புணர்வு திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது.

16 Apr 2026

கடற்படை பொது மருத்துவமனையின் உள்நோயாளிகளின் நலனுக்காக கடற்படை சங்கத்தால் வழங்கிய நன்கொடை

இலங்கை கடற்படை சங்கம், 2026 ஏப்ரல் 07 ஆம் திகதியன்று, கொழும்பு கடற்படை பொது மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக, அத்தியாவசிய ஆடைத் தொகுப்புகள், படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகளை மருத்துவமனை வளாகத்தில் நன்கொடையாக வழங்கியது.

16 Apr 2026

இந்தோனேசிய கடற்படைக் கப்பலான 'KRI BIMA SUCI - 945' நல்லெண்ணப் பயணத்திற்காக தீவிற்கு வந்தடைந்தது

ASEAN Plus Cadet Sail (APCS) – 2026 திட்டத்தின் கீழ், இந்தோனேசிய கடற்படையைச் சேர்ந்த கேடட் அதிகாரிகள் உட்பட இருபத்தாறு (26) வெளிநாடுகளைச் சேர்ந்த கேடட் அதிகாரிகளுடன், இந்தோனேசிய கடற்படைக் கப்பலான ‘KRI BIMA SUCI - 945’ நல்லெண்ணப் பயணத்திற்காக இன்று (2026 ஏப்ரல் 15) தீவிற்கு வந்தடைந்ததையடுத்து, கடற்படை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு இணங்க கொழும்பு துறைமுகத்தில் அக்கப்பலை வரவேற்றனர்.

15 Apr 2026

நல்லெண்ண வருகைக்காக தீவிற்கு வந்தடைந்த பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்களான ‘PNS TAIMUR’ மற்றும் ‘PNS ASLAT’ ஆகியவை தீவிலிருந்து புறப்பட்டுச் சென்றன

பாகிஸ்தான் கடற்படையின் ‘PNS TAIMUR’ மற்றும் ‘PNS ASLAT’ ஆகிய போர்க்கப்பல்கள் நல்லெண்ண வருகைக்காக 2026 ஏப்ரல் 12 ஆம் திகதி காலை கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்ததையடுத்து, அந்த இரு கப்பல்களின் நல்லெண்ண வருகையானது நிறைவடைந்த பின் 2026 ஏப்ரல் 13 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட்டன. ‘PNS TAIMUR’ மற்றும் ‘PNS ASLAT’ ஆகிய இரு கப்பல்களுக்கு இலங்கை கடற்படையினர் தனது கடற்படை மரபுகளின்படி கப்பல்களுக்கு கொழும்புத் துறைமுகத்தில் பிரியாவிடை அளித்தனர்.

15 Apr 2026

பாகிஸ்தான் கடற்படையின் ‘PNS TAIMUR’ மற்றும் ‘PNS ASLAT’ போர்க்கப்பல்கள் நல்லெண்ண வருகைக்காக கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தன

பாகிஸ்தான் கடற்படையின் ‘PNS TAIMUR’ மற்றும் ‘PNS ASLAT’ ஆகிய போர்க்கப்பல்கள் நல்லெண்ண வருகைக்காக 2026 ஏப்ரல் 12 ஆம் திகதி காலை கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்ததையடுத்து, இலங்கை கடற்படை தனது கடற்படை மரபுகளின்படி கப்பல்களை வரவேற்றது.

12 Apr 2026

சிறப்பு படகுகள் படைப்பிரிவுப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த கடற்படை வீரர்களுக்கு கடற்படைத் தளபதியினால் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டன

இலங்கை சிறப்பு படகுகள் படைப்பிரிவின் 32வது ஆட்சேர்ப்புப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த இருபத்து நான்கு (24) மாலுமிகளுக்கு பதக்கங்கள் அணிவித்தல், அந்த படைப்பிரிவின் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியான கமாண்டர் லக்மால் வீரக்கொடியின் அழைப்பின் பேரில், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவின் தலைமையில் 2026 ஏப்ரல் 10 ஆம் திகதி திருகோணமலை, கடற்படைத் தளத்தில் உள்ள சிறப்புக் படகுகள் படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

11 Apr 2026