நிகழ்வு-செய்தி

இலங்கை முப்படை மருத்துவ மாணவர் சங்கத்தின் 09 வது தலைவர் நியமித்தல் வெலிசரவில் நடைபெற்றது

இலங்கை முப்படை மருத்துவ மாணவர் சங்கத்தின் புதிய (09) தலைவரின் பதவியேற்பு விழா 2025 மே 20 ஆம் திகதி வெலிசரவில் உள்ள ‘வேவ் எண்ட் லேக்’ கடற்படை நிகழ்வு மண்டபத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்களின் தலைமையில் நரம்பியல் நிபுணர் டாக்டர் ஹர்ஷ குணசேகர அவர்களின் கௌரவ பங்கேற்புடன் நடைபெற்றது.

23 May 2025

சர்வதேச இராணுவ விளையாட்டு அமைப்பின் உறுப்பினர்கள் தேசிய போர் வீரர்கள் நினைவுச்சின்னத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்

சர்வதேச இராணுவ விளையாட்டு அமைப்பின் 80வது பொதுச் சபை மற்றும் மாநாடு இலங்கை பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு வாரியத்தின் அனுசரணையில் 2025 மே 19 முதல் கொழும்பில் நடைபெறுவதுடன், இதற்கு இணையாக மாநாட்டில் பங்கேற்ற ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராணுவ வீரர்கள் 2025 மே 20 அன்று பத்தரமுல்ல போர் வீரர்கள் நினைவுச்சின்னத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

22 May 2025

கடற்படையின் இரத்த தானத்திட்டம்

இலங்கை கடற்படையின் மற்றொரு சமூகப் பணியாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சியானது 2025 மே 20 ஆம் திகதி இலங்கை கடற்படைக் கப்பல் பண்டுகாபயாவின் கடற்படை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

22 May 2025

காலி அகலிய பாலத்தில் சிக்கிய அடைப்பை அகற்ற கடற்படை நடவடிக்கை மேற்கொண்டது

காலி, பத்தேகம பகுதியில் ஜின் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள அகலிய பாலத்தினுல் சிக்கிய அடைப்பை அகற்றும் நடவடிக்கையை கடற்படை 2025 மே 20 ஆம் திகதி மேற்கொண்டது.

22 May 2025

கடற்படைத் தளபதி திருகோணமலை சிறப்பு படகுகள் படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்

கடற்படைத் தளபதி, திருகோணமலை சிறப்பு படகுகள் படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தபோது, 2025 மே 18 அன்று படைப்பிரிவைச் சேர்ந்த கடற்படை வீரர்களுடன் உரையாடி, கடற்படை நடவடிக்கைகள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகளை வெற்றிகரமாக நடத்துவதற்கான வழிமுறைகளை வழங்கி, கடற்படையின் பொறுப்புகள் குறித்து அவர்களுக்கு விளக்கினார்.

22 May 2025

இந்தியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியை உத்தியோகப்பூர்வ சந்திப்புக்காக சந்தித்தார்

இந்தியாவின் புது தில்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தில் இலங்கைக்கான பாதுகாப்பு ஆலோசகராகவும் பணியாற்றும் கர்னல் Avihay Zafrany, இன்று (2025 மே 20) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை உத்தியோகப்பூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்.

20 May 2025

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ராகம 'ரணவிரு செவன'விற்கு விஜயம் செய்தார்

மே 19 ஆம் திகதி நடைபெறும் தேசிய போர் வீரர்கள் தின நிகழ்வுகளுடன் இணைந்து, கௌரவ. பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) அவர்கள், படைகளின் தளபதிகளுடன் சேர்ந்து, ராகமவில் உள்ள 'ரணவிரு செவன 'வில் தங்கி சிகிச்சை பெற்று வரும் போர்வீரர்களின் நலன் தொடர்பில் 2025 மே 19 அன்று ஆய்வு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.

20 May 2025

பத்தரமுல்லையில் உள்ள போர் வீரர்கள் நினைவு தூபி முன்னிலையில் ஜனாதிபதி தலைமையில் தேசிய போர் வீரர்கள் நினைவு நிகழ்வு

2025 ஆம் ஆண்டுக்கான தேசிய போர்வீரர் நினைவு நிகழ்வு, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் ஆயுதப்படைகளின் சேனாதிபதியுமான அதிமேதகு அனுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையிலும் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் போர்வீரர் சேவை ஆணையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், பத்தரமுல்ல போர்வீரர் நினைவு தூபி முன்னிலையில் 2025 மே 19 ஆம் திகதி பெருமையுடன் நடைபெற்றது.

20 May 2025

சர்வதேச இராணுவ விளையாட்டு அமைப்பின் 80வது பொதுச் சபை கூட்டம் மற்றும் மாநாடு கொழும்பில் தொடங்கியது

இலங்கை பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு சபையின் ஏற்பாட்டில், சர்வதேச இராணுவ விளையாட்டு அமைப்பின் 80வது பொதுச் சபை மற்றும் மாநாடு இன்று (2025 மே 19) கொழும்பில் உள்ள கிராண்ட் மைட்லேண்ட் ஹோட்டலில் கௌரவ பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) அவர்களின் தலைமையில் ஆரம்பித்ததுடன் அங்கு வரவேற்ப்பு உரையானது கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

20 May 2025

இலங்கை கடற்படையினர் 100 மீட்டர் ஆழத்திற்கு சுழியோடியதன் மூலம் கடற்படையின் சுழியோடி செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது

இலங்கை கடற்படையின் சுழியோடி திறன்களை விரிவுபடுத்தும் வகையில், திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள எலிபன்ட் தீவுக்கு அருகிலுள்ள ஆழ்கடலில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவின் மேற்பார்வையின் கீழ் 09 பேரை கொண்ட கடற்படை சுழியோடி குழுவானது 2025 மே 18 100 மீட்டர் ஆழத்திற்கு சுழியோடி வெற்றிகரமாக திரும்பினர்.

19 May 2025