நிகழ்வு-செய்தி
அம்பாறை நாமல் ஓயா நீர்த்தேக்கத்தில் உள்ள மதகினை சீர்செய்வதற்கு கடற்படையின் சுழியோடி பங்களிப்பு

செயலற்ற நிலையில் இருந்த நாமல் ஓயா நீர்த்தேக்கத்தின் இடது கரை வான் மதகைச் சரிசெய்து அதனை மீண்டும் செயல்பாட்டு நிலைக்கு கொண்டு வருவதற்காக 2025 ஜூன் 06 ஆம் திகதி சுழியோடி ஆதரவினை கடற்படையினர் வழங்கினர்.
11 Jun 2025
அரச நோர்வே கடற்படைக் கப்பலான ‘HNOMS ROALD AMUNDSEN’ தீவுக்கு வந்தடைந்தது

அரச நோர்வே கடற்படையின் கப்பலான ‘HNOMS ROALD AMUNDSEN’ விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 2025 ஜூன் 10 ஆம் திகதி அன்று தீவை வந்தடைந்ததுடன், மேலும் இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வரவேற்க்கும் நிகழ்வானது நடைப்பெற்றது.
11 Jun 2025
உலக சுற்றுச்சூழல் தினத்துடன் இணைந்து சுற்றுச்சூழல் நட்பு திட்டங்களுக்கு கடற்படையின் சமூக பங்களிப்பு.

'முழுநிறைவான வாழ்க்கை - வசதியான நாடு' என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, கடல் மற்றும் கடலோர வலயத்தின் நிலையான இருப்புக்கு உறுதியளித்துள்ள கடற்படை, 'நிலைபேறான உயிர்சார் உலகம் – என்னும் பசுமையான வாழ்க்கை' என்ற கருத்தை யதார்த்தமாக்குவதற்காக, ஜூன் 05 உலக சுற்றுச்சூழல் தினத்துடன் இணைந்து, கிழக்கு, வடக்கு மற்றும் தென்கிழக்கு கடற்படை கட்டளைகளை மையமாகக் கொண்டு 2025 ஜூன் 04 மற்றும் 05 ஆகிய இரு தினங்களில் நடத்தப்பட்ட சுற்றுச்சூழல் நட்பு திட்டங்களுக்கு அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து இலங்கை கடற்படையானது சமூக சேவையையில் ஈடுபட்டது.
10 Jun 2025
கடற்படைத் தளபதி வடமேற்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, 2025 ஜூன் 06 முதல் 08 வரை வடமேற்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டபோது, கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட அதிகாரிகள், மாலுமிகளை சந்தித்து உரையாற்றியதுடன் கடற்படையின் நடவடிக்கைகள், பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் மேம்பாட்டு மற்றும் நலன்புரி திட்டங்களை திறம்பட நடத்துவதற்கான அறிவுரைகளை வழங்கி, கடற்படையின் பொறுப்புகள் குறித்து விளக்கினார்.
09 Jun 2025
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் அனுராதபுரம் மாவட்டத்தில் நிறுவப்பட்ட 04 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், அனுராதபுரம் மாவட்டத்தின் நொச்சியாகம பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஹேஹெட்டுவாகம, அமுனுகலை, அடம்பனை மற்றும் கட்டுபத் வாவி ஆகிய பகுதிகளில் கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்பு மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் நிதி உதவியுடனும் நிறுவப்பட்ட நான்கு (04) மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2025 ஜூன் 04 ஆம் திகதி பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன.
09 Jun 2025
உலக சமுத்திர தின தேசிய திட்டம் கொழும்பு துறைமுக நகரத்தில்

ஜூன் மாதம் 08 ஆம் திகதி வரும் உலக சமுத்திர தினத்தை முன்னிட்டு, சமுத்திரத்தின் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் மற்றும் எதிர்காலத்திற்காக சமுத்திரத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய நிகழ்ச்சி திட்டம் கொழும்பு துறைமுக நகரில் இன்று (2025 ஜூன் 08) நடைபெற்றது.
09 Jun 2025
கல்முனை லாபீர் கல்லூரியை கவர்ச்சிகரமான மறுசீரமைப்பதற்கு கடற்படையின் சமூக சேவை பங்களிப்பு

"மகிழ்ச்சி நிறைந்த பாடசாலை" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட, சமூக மதிப்புகள் உட்பட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கல்விச் சூழலை வளர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையின் சமூக பராமரிப்பு பங்களிப்புடன் கல்முனை லாபீர் கல்லூரியை கவர்ச்சிகரமான மறுசீரமைப்பதற்கு பணிகள் 2025 மே 30 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.
09 Jun 2025
இந்திய துணைக் கடற்படைத் தளபதி உத்தியோகப்பூர்வ சந்திப்புக்காக கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இலங்கையில் நடைபெரும் எட்டாவது (08) வருடாந்த இந்திய மற்றும் இலங்கை பாதுகாப்பு உரையாடலுக்காக தீவுக்கு வந்த இந்திய கடற்படையின் துணைக் கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் இன்று (2025 ஜூன் 05) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை உத்தியோகபூர்வ சந்திப்புக்காக சந்தித்தார்.
06 Jun 2025
திருகோணமலை புறா தீவைச் சுற்றியுள்ள கடலில் உள்ள பவளப்பாறை சுற்றுச்சூழல் கட்டமைப்பை சுத்தம் செய்வதற்காக கடற்படையின் சமூக சேவை பங்களிப்பு

திருகோணமலை புறாத் தீவைச் சுற்றியுள்ள கடலில் உள்ள பவளப்பாறை சுற்றுச்சூழல் கட்டமைப்பின் பல்லுயிர் பெருக்கத்திற்கு சேதம் விளைவிக்கும் மீன்பிடி வலைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் ஆக்கிரமிப்பு உயிரினங்கள் உள்ளிட்ட குப்பைகளை பவளப்பாறைகளிலிருந்து அகற்றும் திட்டம் உலக சுற்றுச்சூழல் தினத்துடன் இணைந்து, தூய்மை இலங்கை செயலகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், 2025 ஜூன் 02, அன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டதுடன், கடற்படை சுழியோடிகளினால் இத்திட்டமானது மேற்கொள்ளப்பட்டது.
04 Jun 2025
ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான கௌரவ ரிச்சர்ட் மார்ல்ஸ் கடற்படைத் தளபதியை உத்தியோகப்பூர்வ சந்திப்புக்காக சந்தித்தார்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான கௌரவ ரிச்சர்ட் மால்ஸ் உள்ளிட்ட ஆஸ்திரேலியக் குழு, 2025 ஜூன் 03 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை உத்தியோகபூர்வ சந்திப்புக்காக சந்தித்ர்.
04 Jun 2025