நிகழ்வு-செய்தி

கின்னஸ் உலக சாதனை படைப்பதற்காக, ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே தனது ஓட்டத்தைத் தொடங்கினார்

ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே (ஓய்வு), (Manual Treadmill) இல் 48 மணி நேரம் தொடர்ச்சியாக ஓடி கின்னஸ் உலக சாதனை (01) ஒன்றை படைப்பதற்காக, உலக சாதனை படைக்க சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மேற்பார்வையின் கீழ், இன்று (2026 மார்ச் 20) காலை 1000 மணிக்கு கொழும்பு கடற்படைத் தளத்தில் தனது ஓட்டத்தைத் தொடங்கினார். இந்நிகழ்வில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கௌரவ சுனில் குமார கமகே மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொ ட ஆகியோர் கலந்துகொண்டனர்.

20 Mar 2026

இலங்கை பாதுகாப்பு தூதுக்குழு ஜப்பானில் உயர்மட்ட சந்திப்புகளில் மேட்கொண்டது

இலங்கை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையிலான உயர்மட்ட பாதுகாப்பு தூதுக்குழு, 2ஆம் ஜப்பான்–இலங்கை பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக ஜப்பானுக்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தைத் மேட்கொண்டது. இந்த முக்கிய நிகழ்வு, குறிப்பாக பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு துறைகளில் இரு நாடுகளுக்கிடையேயான நீண்டநாள் நட்பு மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

20 Mar 2026

GAJABAHU கப்பலில் இலங்கை கடற்படையின் பணிக்குழுப் பிரதானி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவை சிறப்புத் தூதுவர் கோர் சந்தித்தார்

எமது நீண்டகால கடல்சார் பங்காண்மையின் வலிமையினை அடையாளப்படுத்தும் வகையில் தற்போது இலங்கை கடற்படையில் சேவையிலீடுபட்டுள்ள முன்னாள் அமெரிக்க கடலோர காவற்படைக் கப்பலான SLNS GAJABAHU கப்பலில் இலங்கை கடற்படையின் பணிக்குழுப் பிரதானி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவை சிறப்புத் தூதுவர் கோர் சந்தித்தார். இலங்கையை வந்தடைவதற்காக பசிபிக் சமுத்திரத்தினூடாக தற்போது பயணித்துக்கொண்டிருக்கும் நான்காவது முன்னாள் அமெரிக்க கடலோர காவற்படைக் கப்பலான ex-DECISIVE எமது கடல்சார் பாதுகாப்புப் பங்காண்மை மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றை மேலும் விரிவுபடுத்தும்.

20 Mar 2026

“SHIPWRECKS AROUND SRI LANKA” என்ற இணையதள வெளியீட்டிற்கு கடற்படையின் உதவி

இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தால், கடற்படையின் ஒத்துழைப்பு மற்றும் ஏற்பாட்டில், “SHIPWRECKS AROUND SRI LANKA” என்ற இணையதளத்தின் ஆரம்ப விழா 2026 மார்ச் 12 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றதுடன், இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி, அட்மிரல் கான்சன பானகொட கலந்துகொண்டார்.

18 Mar 2026

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பல் “JMSDF OONAMI” தீவை உத்த்யோகப்பூர்வ விஜயத்தை முடித்துவிட்டு தீவிலிருந்து புறப்படுகிறது

ஜப்பானிய கடற்படை தற்காப்புப் படையின் கப்பலான “JMSDF OONAMI” உத்த்யோகப்பூர்வ விஜயத்திற்காக 2026 மார்ச் 09 ஆம் திகதி தீவை வந்தடைந்ததுடன், உத்த்யோகப்பூர்வ விஜயத்தை முடித்துவிட்டு, சேவைத் தேவைகளை நிறைவேற்றிய பின்னர், 2026 மார்ச் 11 ஆம் திகதி தீவிலிருந்து புறப்பட்டது. மேலும் கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுகளுக்கு இணங்க குறித்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் பிரியாவிடை அழித்தனர்.

18 Mar 2026

போர் வீரர்கள் கடற்படை சுற்றுலாவில் பங்கேற்பு

இராணுவத் தளபதியின் கருத்திற்கமைய, போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ், ரணவிரு செவன நல விடுதி நிலையம், மிஹிந்து செத் மெதுர மற்றும் அபிமன்சல 1, 2, மற்றும் 3 நல விடுதியிலுள்ள போர்வீரர்கள் கடற்படைத் தளபதியின் ஒப்புதலுடன், 2026 மார்ச் 04 ஆம் திகதி காலி தெற்கு கடற்படைத் தளத்திலிருந்து இலங்கை கடற்படைக் கப்பலான "லங்கா தேவி"யில் திமிங்கலத்தைப் பார்க்கும் சுற்றுப்பயணத்திற்காக கடற்படை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

17 Mar 2026

உலக உடல் பருமன் தின விழிப்புணர்வு நடைபயணத்தில் இலங்கை கடற்படை பங்கேற்பு

உலக உடல் பருமன் தினத்தை முன்னிட்டு “Healthy Weight – Wealthy Life.” என்ற கருப்பொருளின் கீழ், கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவைச் சுற்றிய பகுதியில் 2026 மார்ச் 07 ஆம் திகதி நடைபெற்ற பொதுமக்கள் விழிப்புணர்வு நடைபயணத்தில் இலங்கை கடற்படை கலந்து கொண்டது.

17 Mar 2026

உத்தியோகபூர்வ விஜயத்திற்காக தீவை வந்தடைந்த இந்திய கடற்படைக் கப்பலான ‘INS TARANGINI’ தீவை விட்டு புறப்படுகின்றது

உத்தியோகபூர்வ விஜயத்திற்காக 2026 பிப்ரவரி 27 ஆம் திகதி தீவை வந்தடைந்த, இந்திய கடற்படைக் கப்பலான ‘INS TARANGINI’ தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு 09 மார்ச் 2026 தீவை விட்டு புறப்பட்டதுடன், இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினரின் பாரம்பரிய முறைப்படி கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.

16 Mar 2026

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதில் கடற்படை, அரசு நிறுவனங்கள் மற்றும் வடக்கு மீனவ சமூகம் முன்னிலை வகிக்கின்றன

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் கடல் சூழல், சுற்றுலாத் துறை மற்றும் எதிர்கால சந்ததியினர் மீது ஏற்படும் பாதகமான தாக்கம் குறித்து வட மாகாணத்தில் உள்ள மீனவ சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே அவர்களின் தலைமையில், அப்பகுதியில் உள்ள சட்ட அமலாக்க முகவர் மற்றும் வட மாகாண மீனவர் சங்க பிரதிநிதிகளின் பங்கேற்புடன், 2026 மார்ச் 10 ஆம் திகதி வடக்கு நிறுவனத்தில் சிறப்பு நிகழ்ச்சித் தொடர் ஒன்று நடைபெற்றது.

14 Mar 2026

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க கடற்படை உதவியது

அம்பாறையின் பானம பகுதியில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக நிறுவனத்தை அன்மித்த நடமாடிக்கொண்டிருந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க கடற்படை, வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திற்கு 2026 மார்ச் 10 ஆம் திகதி உதவி வழங்கியது.

14 Mar 2026