நிகழ்வு-செய்தி

இந்திய கடற்படையின் “INS Kalpeni (T-75)” என்ற விரைவுத் தாக்குதல் படகு தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் பின் இலங்கையை விட்டு புறப்பட்டுள்ளது

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2024 ஆகஸ்ட் 02 ஆம் திகதி இலங்கைக்கு வந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான “INS Kalpeni (T-75)” என்ற விரைவுத் தாக்குதல் படகு, தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இன்று (2024 ஒக்டோபர் 21) இலங்கையை விட்டு வெளியேறியதுடன் இலங்கை கடற்படையினர் குறித்த நீர்மூழ்கி படகுக்கு கொழும்பு துறைமுகத்தில் வைத்து கடற்படையின் பாரம்பரிய முறைப்படி பிரியாவிடை வழங்கினர்.

21 Oct 2024

இந்திய கடற்படையின் “INS Kalpeni (T-75)” விரைவுத் தாக்குதல் படகு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்திய கடற்படைக்கு சொந்தமான “INS Kalpeni (T-75)” என்ற விரைவு தாக்குதல் படகு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2024 ஒக்டோபர் 19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, வருகை தந்த படகை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

19 Oct 2024

கடற்படை சேவைகள் பணிப்பாளர் நாயகமாக ரியர் அட்மிரல் லஷாந்த் என் ஹேவாவிதாரண பதவியேற்றார்

இலங்கை தொண்டர் கடற்படைத் தளபதியாக இருந்த, ரியர் அட்மிரல் லஷாந்த் என் ஹேவாவிதாரண, கடற்படையின் பணிப்பாளர் நாயகமாக இன்று (2024 ஒக்டோபர் 18) கடற்படைத் தலைமையகத்தில் உள்ள பணிப்பாளர் நாயகம் சேவைகள் அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

18 Oct 2024

இரண்டாவது இந்திய-பசிபிக் தகவல் பரிமாற்ற வழிகாட்டல் குழு கொள்கை வாரியம் மற்றும் பணிக்குழு கூட்டம் - 2024 கொழும்பில் வெற்றிகரமாக நிறைவடைந்தது

இந்து-பசிபிக் தகவல் பரிமாற்ற வழிகாட்டல் குழு கொள்கை வாரியம் பணிக்குழு மற்றும் இலங்கை கடற்படையின் இணைத்தலைவர் 2024 ஒக்டோபர் மாதம் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு தினங்களில் (02) கொழும்பு கோட்யார்ட் ஹோட்டல் வளாகத்தில் இரண்டாவது இந்து-பசிபிக் தகவல் பரிமாற்ற வழிகாட்டல் குழு கொள்கை வாரியம் மற்றும் பணிக்குழு கூட்டம் - 2024 (2nd IORIS Steering Committee Policy Board and Working Groups Meeting -2024), 2024 ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வெற்றிகரமாக முடிவடைந்தது.

18 Oct 2024

இந்திய உயர் பாதுகாப்பு மேலாண்மை பாடநெறியின் அதிகாரிகள் கடற்படை தலைமையகத்திற்கு வருகை

இலங்கைக்கான ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய உயர் பாதுகாப்பு மேலாண்மை பாடநெறியின் (Higher Defence Management Course India) மாணவர் அதிகாரிகள் மற்றும் கல்விப் பணியாளர்களைக் கொண்ட Colonel Kedar D Gupte தலைமையிலான அதிகாரிகள் குழு இன்று (2024 அக்டோபர் 15) கடற்படைத் தலைமையகத்திற்கு வருகைதந்தனர். கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகைதந்த குழுவினரை கடற்படைத் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட கடற்படைத் தலைமையகத்திற்கு வரவேற்றார்.

15 Oct 2024

இரண்டாவது இந்து-பசிபிக் தகவல் பரிமாற்ற வழிகாட்டல் குழு கொள்கை வாரியம் மற்றும் பணிக்குழு கூட்டம் - 2024 கொழும்பில்

ஐரோப்பிய ஒன்றியத்தால் நடத்தப்படும் இரண்டாவது இந்து-பசிபிக் தகவல் பரிமாற்ற வழிகாட்டல் குழு கொள்கை வாரியம் மற்றும் பணிக்குழு கூட்டம் - 2024 (2nd IORIS Steering Committee Policy Board and Working Groups Meeting -2024) இன்று (2024 அக்டோபர் 15) கொழும்பு கோட்யார்ட் ஹோட்டல் வளாகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் ஆரம்பமானது.

15 Oct 2024

கடற்படைக் களப் பயிற்சி “Marines Field Training Exercise Blue Whale - 2024” வெற்றிகரமாக நிறைவடைந்தது

இலங்கை கடற்படையின் மரைன் படையணியால் மூன்றாவது (03) தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட “Marines Field Training Exercise Blue Whale - 2024” கடற்படைக் களப் பயிற்சி 2024 ஒக்டோபர் 07 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை வடமேற்கு கடற்கரை மற்றும் அதனுடன் தொடர்புடைய கரையோரப் பகுதியை மையமாகக் கொண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டதுடன் பயிற்சியின் இறுதி உரை கிழக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ தலைமையில் திருகோணமலை இலங்கை கடற்படை கப்பல் விதுர மரைன் படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.

15 Oct 2024

கடற்படை தளபதி ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்

ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் பட்டப்படிப்பை முடித்த 1732 பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு விழா 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெறுகிறது. இன்று (2024 அக்டோபர் 14) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இரண்டாவது அமர்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

14 Oct 2024

கடற்படையின் புதிய பிரதித் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்

இலங்கை கடற்படையின் புதிய பிரதித் தலைமை அதிகாரியாக பணிப்பாளர் நாயகம் செயற்பாடுகள், ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ் 2024 ஒக்டோபர் 11 ஆம் திகதி நியமிக்கப்பட்டதுடன், அதற்கான நியமனக் கடிதம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவினால் இன்று (2024 ஒக்டோபர் 14) வழங்கப்பட்டது. மேலும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள துணைத் தலைமை அதிகாரிக்கு தனது வாழ்த்துகளையும் கடற்படை தளபதி தெரிவித்துள்ளார்.

14 Oct 2024

இத்தாலி கடற்படைக்கு சொந்தமான ‘PPA MONTECUCCOLI’ என்ற கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கையை விட்டு புறப்பட்டுள்ளது

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்தடைந்த இத்தாலி கடற்படைக்கு சொந்தமான ‘PPA MONTECUCCOLI’ என்ற கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இலங்கை கடற்படைக் கப்பல் கஜபாகுவுடன் இணைந்து நடத்திய கடற்படைப் பயிற்சியின் பின்னர், இன்று (2024 அக்டோபர் 13) இலங்கையை விட்டு புறப்பட்டுள்ளது. புறப்பட்ட கப்பலுக்கு கடற்படையின் பாரம்பரிய முறைப்படி இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் பிரியாவிடை வழங்கினர்.

13 Oct 2024