நிகழ்வு-செய்தி

அணு கடத்தலை கண்டறிதல் மற்றும் தடுப்பு உபகரணங்களை இயக்குவது தொடர்பான பயிற்சி பாடநெறி 25-1 வெற்றிகரமாக நடத்தப்பட்டது

திருகோணமலை சிறப்பு கைவினைப் படைத் தலைமையகத்தில் இரண்டு (02) கட்டங்களாக நடைபெற்ற அணு கடத்தலை கண்டறிதல் மற்றும் தடுப்பு உபகரணங்களை இயக்குவது தொடர்பான பயிற்சி பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் விழா, கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ரவீந்திர திசேராவின் தலைமையில், 2025 ஜூன் 27 ஆம் திகதி திருகோணமலை சிறப்பு கைவினைப் படைத் தலைமையகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

30 Jun 2025

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் அனுராதபுரம் மாவட்டத்தில் நிறுவப்பட்ட 03 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன

அனுராதபுரம் மாவட்டத்தின் தலாவ பிரதேச செயலகப் பிரிவில் உள்ள எதகல, கல்வடுவாகம மற்றும் யாய 2 மேல் பகுதி ஆகிய கிராமங்களில் கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கைவினைக் கலை உதவியுடனும் ஜனாதிபதி செயலகத்தின் நிதி உதவியுடனும் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு (03) நிலையங்கள் 2025 ஜூன் 26 ஆம் திகதி பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன.

27 Jun 2025

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட இலங்கை இராணுவத் தளபதியை சந்தித்தார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோவை இராணுவத் தலைமையகத்தில் 2025 ஜூன் 25 அன்று சந்தித்தார்.

27 Jun 2025

கதிர்காம பாத யாத்திரையுடன் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக கடற்படையின் சமூக சேவை பங்களிப்பு

குமண தேசிய பூங்கா வழியாக கதிர்காமத்திற்கு பாத யாத்திரையில் பங்கேற்கும் ஏராளமான பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக தேவையான சமூக ஆதரவை வழங்குவதற்காக இலங்கை கடற்படை 2025 ஜூன் 20 முதல் ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தியதுடன், இதனைத் தொடர்ந்து, தென்கிழக்கு கடற்படை கட்டளையின் தலைமையில் குமன தேசிய பூங்காவில் ஒரு சிறப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தை கடற்படையினர் 2025 ஜூன் 25 அன்று தொடங்கினர்.

27 Jun 2025

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தில் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது

மொனராகலை மாவட்டத்தின் படல்கும்புர பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மாலிகாத்தென்ன கல்லூரியில் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்களுக்காக கையளிக்கப்படும் நிகழ்வானது, கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன் மற்றும் கம்மெந்த சமூக சேவை திட்டத்தின் கீழ், பொரளையைச் சேர்ந்த எம்.பி. அமரசிங்கவின் நிதி பங்களிப்புடன், 2025 ஜூன் 20 ஆம் திகதி நடைபெற்றது.

27 Jun 2025

கடற்படை சிறப்பு மருத்துவ மற்றும் பல் மருத்துவ சிகிச்சையானது நடத்தப்பட்டது

இலங்கை கடற்படையின் மற்றொரு சமூகப் பணியாக ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவ மற்றும் பல் மருத்துவ சிகிச்சையானது 2025 ஜூன் 21 அன்று திருகோணமலை மாவட்டத்தின், ஆண்டாங்குளம், வேலங்கண்ணி கத்தோலிக்க தேவாலயத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

25 Jun 2025

மீனவ சமூகத்தை மிகவும் பாதுகாப்பானதாக்க கடற்படையின் அடிப்படை வாழ்க்கை ஆதரவு பயிற்சி நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது

இலங்கை கடற்படை, கடற்றொழில் திணைக்களத்துடன் இணைந்து மீனவ சமூகத்தினருக்கான அடிப்படை முதலுதவி மற்றும் அடிப்படை வாழ்க்கை உதவி (Basic Life Support - BLS) பயிற்சித் திட்டத்தை 2025 ஜூன் 20 ஆம் திகதி திருகோணமலை வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தை மையமாகக் கொண்டு வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.

25 Jun 2025

தேசிய நீரியல் தினம் வெலிசரை Wave n’ Lake கடற்படை உற்சவ மண்டபத்தில் உலக நீரியல் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது

ஜூன் 21 ஆம் திகதி உலக நீரியல் தினத்தை முன்னிட்டு, இலங்கை கடற்படை மற்றும் இலங்கை நீரியல் அலுவலக சமூகத்தினருடன் இணைந்து இன்று (2025 ஜூன் 24) வெலிசரவில் உள்ள Wave n’ Lake கடற்படை உற்சவ மண்டபத்தில், தேசிய நீரியல் நிபுணர் மற்றும் கடற்படை நீரியல் துறைத் தலைவர் ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட ஆகியோரின் அழைப்பின் பேரில், பாதுகாப்பு துணை அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) தலைமையில் உலக நீரியல் தினத்தைக் வெலிசரை Wave n’ Lake கடற்படை உற்சவ மண்டபத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

24 Jun 2025

கதிர்காம பாத யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களுக்கான கடற்படையின் சமூக பணி

வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசத்தில் இருந்து கதிர்காமம் வரையிலான வருடாந்திர பாத யாத்திரை ஊர்வலத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்குத் குமண தேசிய பூங்காவின் நுழைவாயிலில் இருந்து கும்புக்கன் ஓயா வரையிலான வழியில் தேவையான வசதிகளை வழங்கும் பணியானது இலங்கை கடற்படைனால் 2025 ஜூன் 20 அன்று ஆரம்பமானதுடன், இந்த நடவடிக்கைகளை கண்காணித்து பாத யாத்திதரையில் கலந்துக்கொண்ட கடற்படைத் தளபதி, பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக தேவையான சேவைகளை தொடர்ந்து வழங்க கடற்படைத் தளபதி அறிவுறுத்தல்களை வழங்கினார்.

24 Jun 2025

கடற்படைத் தளபதி தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, 2025 ஜூன் 20 முதல் 22 வரை தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, அங்கு கட்டளையின் செயல்பாட்டு, நிர்வாக, நலன்புரி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளைக் கண்காணித்த்துடன் அந்த நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்த தேவையான வழிமுறைகளை வழங்கினார். மேலும், கட்டளையுடன் இணைக்கப்பட்டுள்ள கடற்படை வீரர்களுக்கு கடற்படையின் பொறுப்புகள் மற்றும் செயல்பாட்டு நோக்கங்கள் குறித்து விளக்கினார்.

23 Jun 2025