நிகழ்வு-செய்தி

கடற்படை வீரர்களுக்கு 'அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட்' தடுப்பூசி செலுத்தும் நிகழ்வு வெலிசர கடற்படை வைத்தியசாலையில் இடம்பெற்றது.

அதி மேதகு ஜனாதிபதி கோட்டாய ராஜப்கஷவின் வேண்டுகோளின் பேரில், இந்திய அரசாங்கத்தால் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா கொவிட்ஷீல்ட் (AstraZeneca Covidshield) தடுப்பூசிகளின் கடற்படைக்காக ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகள் சுகாதார அமைச்சகத்தில் இருந்து இன்று (2021 ஜனவரி 29) வெலிசர கடற்படை பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட பின் கொவிட் – 19 வைரஸ் தடுப்புக்காக முன்னிலையிலிருந்து செயலாற்றும் சில கடற்படை வீரர்களுக்கு முதற் கட்டமாக இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

29 Jan 2021

மறைந்த ரியர் அட்மிரல் மொஹான் ஜெயமஹவின் நினைவு சிலை தம்புல்லையில் திறக்கப்பட்டது

தாய்நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த துணிச்சலான போர்வீரரான ரியர் அட்மிரல் மொஹான் ஜெயமஹவை நினைவுகூருவதுக்காக தம்புல்லை, தபுலுகம மப/கலே/வீர மொஹான் ஜெயமஹ மகா வித்தியாலயத்தில் கடற்படையால் நிர்மானிக்கப்பட்ட நினைவு சிலை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் இன்று (2021 ஜனவரி 29) திறந்து வைக்கப்பட்டன.

29 Jan 2021

சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் புதிய தளபதி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் புதிய தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த ஹேரத் இன்று (2021 ஜனவரி 27) கடற்படை தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.

27 Jan 2021

கடற்படை சிறப்பு படகுகள் படையின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் நிச்சங்க விக்ரமசிங்க கடமைகளை ஏற்றுக்கொண்டார்

இலங்கை கடற்படை சிறப்பு படகுகள் படையின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் நிச்சங்க விக்ரமசிங்க 2021 ஜனவரி 15 அன்று கடற்படை சிறப்பு படகுகள் படைத் தலைமையகத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

19 Jan 2021

ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க கடற்படையின் தலைமை அதிகாரியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தலைவரும், ஆயுதப்படைகளின் தலைவருமான ஜனாதிபதி அதிமேதகு கோட்டபய ராஜபக்ஷ அவர்கள் ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்கவை இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக 2021 ஜனவரி 15 ஆம் திகதி முதல் அமல்படுத்தினார்.

16 Jan 2021

கடற்படை தளபதியின் 36 வருட கடற்படை வாழ்க்கைக்கு ஆசீர்வாத மலித்து மதத் திட்டமொன்று இடம்பெற்றது

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் 36 ஆண்டுகால புகழ்பெற்ற கடற்படை வாழ்க்கையை குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட மத நிகழ்ச்சியொன்று 2021 ஜனவரி 06 ஆம் திகதி மற்றும் இன்று (2021 ஜனவரி 07) கண்டி புனித தலதா மாலிகையில் மற்றும் கொழும்பு ஹுனுபிட்டிய கங்காரமயில் நடைபெற்றது.

07 Jan 2021

கடற்படையின் பங்களிப்பால் பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நிர்மாணிக்கப்பட்ட லதா மண்டபம் மற்றும் தாமரை குளம் திறக்கப்பட்டது

கடற்படையின் பங்களிப்பால் பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நிர்மாணிக்கப்பட்ட லதா மண்டபம் மற்றும் தாமரை குளம் 2021 ஜனவரி 06 அன்று கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் பேராதெனிய பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் திறந்து வைக்கப்பட்டது

07 Jan 2021

‘மென் இன் வைட்ஸ்’ (Men in whites) அமைப்பிலிருந்து கடற்படை ஊனமுற்ற போர்வீரர்களுக்கு சிறப்பு ஆடைகள் வழங்கப்பட்டது

ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகளின் அமைப்பான மென் இன் வைட்ஸ்(Men in whites), அமைப்பு மூலம் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யப்பட்ட துணியிலிருந்து தயாரிக்கப்பட்ட டி-ஷர்ட்களை ஊனமுற்ற கடற்படை வீரர்களுக்கு வழங்குவதற்காக அமைப்பின் கொமான்டர் (ஓய்வு) ஹிரான் சொய்சா மற்றும் லெப்டினன்ட் (ஓய்வு) ஆயேஷ் இந்திரநாத் ஆகியோரால் 2021 டிசம்பர் 31 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவிடம் கடற்படை தலைமையகத்தில் அடையாளமாக ஒப்படைக்கப்பட்டது.

06 Jan 2021

கடற்படையால் நிர்மாணிக்கப்பட்ட மற்றொரு நீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது

நாட்டில் இருந்து கொடிய சிறுநீரக நோயை ஒழிக்கும் தேசிய பணியில் இலங்கை கடற்படை முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் மற்றொரு கட்டமாக அம்பலண்தோட்டை, சியம்பலாகொடே பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையமொன்று 2021 ஜனவரி 03 ஆம் திகதி நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் பாதுகாப்பு, உள்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை மாநில அமைச்சர் திரு சமல் ராஜபக்ஷ அவர்களினால் பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

04 Jan 2021

காலி முகத்திடலில் தேசியக் கொடியை ஏற்றும் பணி மற்றும் ஜனாதிபதி மாளிகையில் விசேட அணி வகுப்பு கடற்படை ஏற்றுக்கொண்டது.

காலி முகத்திடலில் தேசியக் கொடியை ஏற்றும் பணி மற்றும் கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் விசேட அணி வகுப்பு தொடர்பான கடமைகள் 2020 டிசம்பர் 31 ஆம் திகதி மற்றும் இன்று (2021 ஜனவரி 01) இலங்கை இராணுவத்தில் இருந்து இலங்கை கடற்படை ஏற்றுக்கொண்டது. இந் நிகழ்வுகள் காலி முகத்திடலில் மற்றும் கொழும்பு ஜனாதிபதி மாளிகை முன் இடம்பெற்றது.

01 Jan 2021