நிகழ்வு-செய்தி

ரியர் அட்மிரல் பந்துல சேனாரத்ன வட மத்திய கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்

வட மத்திய கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் பந்துல சேனாரத்ன 2021 ஜூலை 20 ஆம் திகதி வட மத்திய கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

20 Jul 2021

இலங்கை கடற்படையால் புதிய சுழியோடுதல் சாதனை

நீருக்கடியில் சுழியோடுதல் செய்வது ஒரு அற்புதமான அனுபவம் என்றாலும், சுழியோடுதல் ஒரு ஆபத்தான முயற்சியாகும். இந்த அபாயங்களுக்கு சவாலாக திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் யானை தீவுக்கு அருகில் ஆழ்கடலில் 100 மீட்டர் ஆழத்துக்கு சுழியோடி 2021 ஜூலை 17 ஆம் திகதி கட்டளை சுழியோடி அதிகாரி (கிழக்கு கடற்படை கட்டளை) கொமாண்டர் நிஷாந்த பாலசூரிய மற்றும் அவரது உதவியாலர் கடற்படை வீரர் (சுழியோடி) டப்டப்என்பி சந்தருவன் ஆகியோர் புதிய சாதனையொன்றை படைத்தனர். கடற்படை வரலாற்றில் இத்தகைய ஆழத்துக்கு சுழியோடிய முதல் நபர்களாக இவர்கள் வரலாற்றுக்கு சேர்ந்தனர்.

19 Jul 2021

கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையமொன்று எப்பாவல சிரி சம்புத்த வீரசிங்ஹாராம விஹாரயவில் திறந்து வைக்கப்பட்டது

கடற்படை சேவா வனிதா பிரிவின் மற்றொரு சமூக சேவையாக, வட மத்திய மாகாணத்தின் துணைத் தலைமைத் தலைவரான புனிதபாத பன்வில குனரத்ன நாயக்க தேரரின் வேண்டுகோளின் படி, பண்டுகலம சிரி சம்புத்த விஹாரயவுக்கு இணைந்த ரொடவெவ,எப்பாவல சிரி சம்புத்த வீரசிங்ஹாராம விஹாரய வளாகத்தில் கடற்படை சேவா வனிதா பிரிவின் நிதியுதவியால் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் சேவா வனிதா பிரிவின் தலைவி சந்திமா உலுகேதென்னவின் தலைமையில் 2021 ஜூலை 17 அன்று திறந்து வைக்கப்பட்டன.

19 Jul 2021

ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன வட மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்

வட மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன 2021 ஜூலை 16 ஆம் திகதி வட மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

17 Jul 2021

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற கடற்படை வீராங்கனைக்கு தர உயர்வு

பெண்கள் 10 மீ வாயு துப்பாக்கி 0.177 போட்டி மூலம் இந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் பொட்டித்தொடருக்கு தகுதி பெற்று இலங்கை கடற்படைக்கும் நாட்டிற்கும் மகத்தான புகழ் கொண்டு வந்த இலங்கை கடற்படையில் பணியாற்றும் பெண் மாலுமியான டெஹானி எகொடவெலவுக்கு தர உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவருக்கு கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவினால் ரூ. 250,000.00 பெறுமதிவாய்ந்த நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

16 Jul 2021

வட இந்து சமுத்திர நீரியல் ஆணைக்குழுவின் 20 வது கூட்டத் தொடர் வெற்றிகரமாக நிறைவு

வட இந்து சமுத்திர நீரியல் ஆணைக்குழுவின் 20 வது கூட்டத் தொடர் ஜூலை 13 முதல் 15 வரை இடம்பெற்றது, நேற்றைய தின (ஜூலை 15) நிகழ்வினை குறிக்கும் வகையில் திரைநீக்கம் செய்யப்பட்டது. கடற்படை அதிகாரிகளின் பிரதி பிரதானியும் தற்போதையவட இந்து சமுத்திர நீரியல் ஆணைக்குழுவின் தலைவருமான ரியர் அட்மிரல் வை என் ஜயரத்ன தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தொடர்தேசிய நீரியல் வள ஆய்வு மற்றும் அபிவிருத்திக்குமாரி முகவர் நிலையம், கடற்படையின்தேசிய நீரியல் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

16 Jul 2021

வெலிசர கடற்படை வைத்தியசாலைக்கு புதிய ஹீமோடையாலிசிஸ் பிரிவு

வெலிசர கடற்படை பொது வைத்தியசாலையின் புதிதாக நிறுவப்பட்ட ஹீமோடையாலிசிஸ் பிரிவு (Hemodialysis Unit ) இன்று (2021 ஜூலை 15) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தலமையில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி சந்திமா உலுகேதென்னவினால் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது.

15 Jul 2021

கடற்படை ஆராய்ச்சி பிரிவு மூலம் வெளியிடப்படுகின்ற கடற்படை இதழின் ஒன்பதாவது பதிப்பு வெளியிடப்பட்டது

கடற்படை ஆராய்ச்சி பிரிவு மூலம் வெளியிடப்படுகின்ற கடற்படை இதழின் ஒன்பதாவது பதிப்பு இன்று (2021 ஜூலை 14) கடற்படை ஆராய்ச்சி பிரிவின் தளபதி கேப்டன் லசந்த விதானகேவினால் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவுக்கு கடற்படை தலைமையகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

14 Jul 2021