நிகழ்வு-செய்தி

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகம் மூலம் கடற்படைக்கு பல உபகரணங்களை நன்கொடையாக வழங்கப்பட்டது

போதைப்பொருள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்களை இலகுவாகக் கண்டறியப் பயன்படுத்தப்படும் 04 கையடக்க பேக்ஸ்கேட்டர் எக்ஸ்ரே இயந்திரங்களை (Portable Backscatter X-ray Machine) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவிடம் கையளிக்கும் நிகழ்வு ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதித் தலைவர் திரு. தோர்ஸ்டன் பார்க்ஃப்ரெட் (Thorsten Bargfrede - Deputy Head of Mission, EU) மற்றும் ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தின் (United Nations Office on Drugs & Crime - UNODC) பிரதிநிதிகளின் தலைமையில் இன்று (2021 நவம்பர் 30) கடற்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

30 Nov 2021

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கடற்படையினரால் அபிவிருத்தி செய்யப்பட்ட இரண்டு பாடசாலைகள் மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஹுங்கம, எத்படுவ கனிஷ்ட வித்தியாலயத்தில் மற்றும் சூரியவெவ, வீரியகம மகா வித்தியாலயத்தில் கடற்படையினரால் அபிவிருத்தி செய்யப்பட்ட வசதிகள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி சந்திமா உலுகேதென்னவின் பங்கேப்பில் இன்று (2021 நவம்பர் 29) மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

29 Nov 2021

தென்கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி தேசிய பாதுகாப்பு கல்லூரியில் அழைக்கப்பட்ட விரிவுரையில் கலந்து கொண்டார்

தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க 2021 நவம்பர் 25 அன்று கொழும்பில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியில் (National Defence College – NDC) முதல் தேசிய பாதுகாப்பு பாடநெறியில் முக்கிய உரையை நிகழ்த்தினார்.

26 Nov 2021

கிண்ணியா, குறிஞ்சங்கேணி பாலத்திற்கு அருகில் பாதுகாப்பான பயணிகள் படகு சேவையை கடற்படை ஆரம்பித்துள்ளது

திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சங்கேணி பாலத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையும் வரை அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை களப்பு ஊடாக வழங்குவதற்காக பாதுகாப்பான பயணிகள் படகு சேவையை இலங்கை கடற்படை 2021 நவம்பர் 25 அம் திகதி முதல் ஆரம்பித்துள்ளது.

26 Nov 2021

71வது கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசீர்வாதமாக கொட்டாஞ்சேனை புனித லுசியா தேவாலயத்தில் தேவ வழிபாடுகள்

2021 டிசம்பர் 09 ஆம் திகதி நடைபெற உள்ள இலங்கை கடற்படையின் 71 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்படுகின்ற சமய நிகழ்ச்சிகள் தொடரில் கிறிஸ்தவ சமய வழிபாடுகள் 2021 நவம்பர் 23 அன்று கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதன்னவின் தலைமையில் கொழும்பு உதவி ஆயர், வண. கலாநிதி அன்டன் ரஞ்சித் தேரர் மற்றும் ஏனைய குருமார்களின் பங்களிப்புடன் கொழும்பு புனித லுசியா தேவாலயத்தில் இடம்பெற்றது.

24 Nov 2021

ஐக்கிய இராச்சியத்தின் நீர்வியல் அலுவலக பிரதிநிதிகள் கடற்படையின் தலைமை நீர்வியலாளருடன் சந்திப்பு

ஐக்கிய இராச்சிய நீர்வியல் அலுவலகத்தின் (United Kingdom Hydrographic Office - UKHO) மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவின் கூட்டாண்மை மற்றும் உறவின் தலைவர் திரு. திமோதி வில்லியம் லூவிஸ் தலைமையிலான ஐக்கிய இராச்சிய நீர்வியல் அலுவலகத்தின் (UKHO) குழுவொன்று 2021 நவம்பர் 22 ஆம் திகதி கடற்படையின் தலைமை அதிகாரி மற்றும் கூட்டுத் தலைமை நீர்வியலாளர் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் முதன்மை நீர்வியலாளரான வை.என் ஜயரத்னவை கடற்படை தலைமையகத்தில் சந்தித்தனர்.

23 Nov 2021

இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஹொல்கர் சியுபட் (Holger Seubert) அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களை இன்று (2021 நவம்பர் 23) கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

23 Nov 2021

வடக்கு தீவுகளுக்கான வடக்கு மாகாண புதிய ஆளுநரின் விஜயத்துக்கு கடற்படையின் உதவி

வடமாகாண ஆளுநராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கௌரவ. ஜீவன் தியாகராஜா அவர்கள் 2021 நவம்பர் மாதம் 20 ஆம் திகதி யாழ் மாவட்டத்தில் உள்ள தீவுகளை நேரில் சென்று பார்வையிட்டார். இதற்கான ஏற்பாடுகளை கடற்படையினர் மேற்கொண்டிருந்தனர்.

23 Nov 2021

சந்தஹிருசேய தூபி மகா சங்கத்தினரிடம் ஒப்படைப்பு

அநுராதபுரம் புனித நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட சந்தஹிரு சேய தூபி மகா சங்கத்தினரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் 2021 நவம்பர் 18 ஆம் திகதி மகா சங்கத்தினரின் ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் நடைபெற்றதுடன் இந்த நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

19 Nov 2021

உக்ரேனிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

உக்ரேனிய பாதுகாப்பு ஆலோசகர் கர்ணல் வோலோடயிமர் பகாய் (Volodymyr Bakai) இன்று (2021 நவம்பர் 16) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்னவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

16 Nov 2021