நிகழ்வு-செய்தி

சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் புதிய தளபதி கடற்படை தளபதியுடன் சந்திப்பு

சபுகஸ்கந்த, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, இன்று (2022 ஜூன் 29,) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவைச் சந்தித்தார்.

29 Jun 2022

மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் தம்மிக குமார கடமைகளை பொறுப்பேற்றார்.

மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் தம்மிக குமார இன்று (2022 ஜூன் 27,) கட்டளைத் தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

27 Jun 2022

தென்கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் பிரசாத் காரியப்பெரும தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்

தென் கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் பிரசாத் காரியப்பெரும இன்று (2022 ஜூன் 24) கட்டளைத் தலைமையகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

24 Jun 2022

கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட கோவிட் தடுப்பூசி திட்டங்களுக்கு கடற்படையின் உதவி

கடற்படையால் மேற்கொள்ளப்படுகின்ற சமூகப் பராமரிப்பு மற்றும் சமூக சேவைகளின் மற்றுமொரு படியாக, கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையில் உள்ள பாடசாலை மாணவர்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட COVID-19 தடுப்பூசி இயக்கத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு இலங்கை கடற்படையினர் சுகாதாரத் துறைக்கு உதவிகளை வழங்கினர்.

24 Jun 2022

கடற்படையின் புதிய பிரதிப் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்

ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா 2022 ஜூன் 21 ஆம் திகதி முதல் இலங்கை கடற்படையின் புதிய பிரதி தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

22 Jun 2022

கடற்படை தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் உபுல் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தளபதியும், ஆயுதப்படைகளின் தளபதியுமான ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ரியர் அட்மிரல் உபுல் டி சில்வாவை இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக 2021 ஜூன் 21 திகதி முதல் அமல்படுத்தினார். அதன்படி, இது தொடர்பான நியமனக் கடிதத்தை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கடற்படைத் தலைமையகத்தில் வைத்து ரியர் அட்மிரல் உபுல் டி சில்வாவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

22 Jun 2022

ரியர் அட்மிரல் வை.என்.ஜயரத்ன கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

36 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து கடற்படையின் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் வை.என்.ஜயரத்ன இன்று (2022 ஜூன் 21) ஓய்வு பெற்றார்.

21 Jun 2022

இலங்கை கடற்படை உலக நீரியல் தினத்தை கொண்டாடுகிறது

2022 ஜூன் 21 ஆம் திகதி ஈடுபட்டுள்ள 101 வது உலக நீரியல் தினத்திற்கு இணையாக இலங்கை கடற்படையின் உலக நீரியல் தின கொண்டாட்டம் கடற்படையின் தலைமை அதிகாரி, கடற்படை மற்றும் அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த நீரியல் துறை தலைவர் ரியர் அட்மிரல் வை.என். ஜெயரத்னவின் தலைமையில் மற்றும் நீரியல் சேவையில் ஏனைய கட்சிகளின் பங்களிப்புடன் இன்று (ஜூன் 21) தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவரகத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

21 Jun 2022

கல்வியில் சிறந்து விளங்கிய கடற்படை அதிகாரிகளுக்கு பிரித்தானிய கடல்சார் நிறுவனத்தினால் விருதுகள் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் கற்கைநெறிகளில் சிறந்து விளங்கிய இரண்டு கடற்படை அதிகாரிகளுக்கு பிரித்தானிய கடல்சார் நிறுவகத்தின் (The Nautical Institute) இலங்கைக் கிளையால் சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்வு 2022 ஜூன் 18 ஆம் திகதி கொழும்பில் உள்ள நிபுணத்துவ சங்க அமைப்பின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற 29வது வருடாந்த பொதுக் கூட்டத்தில் நடைபெற்றது.

20 Jun 2022

பெப்பிலியான சுனேத்ரா மகாதேவி பிரிவேன் ரஜமஹா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சம்புத்த ராஜ மண்டபம் சாசனத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையின் பங்களிப்புடன் பெப்பிலியான சுனேத்ரா மகாதேவி பிரிவேன் ரஜமஹா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மர சம்புத்த ராஜ மண்டபத்தின் மேல்மாடி சங்க தேரர்களிடம் பூஜை செய்தல் மகா சங்கத்தினரின் ஆசிர்வாதத்துடன் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவின் தலைமையில் இன்று (2022 ஜூன் 19) இடம்பெற்றதுடன் இந் நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கலந்துகொண்டார்.

20 Jun 2022