நிகழ்வு-செய்தி

4.7 கிலோ கேரள கஞ்சா வைத்திருந்த இருவர் கடற்படையினரால் கைது
 

மேற்கு கடற்படை கட்டளை பிரதேசத்திட்குட்பட்ட பமுனுகமை, கடற்படை கப்பல் களணி இன் வீரர்கள், 4.7 கிலோ கேரள கஞ்சாவை கொண்டுசென்ற இரு சந்தேக நபர்களை வத்தளை பிரதேசத்தில் வைத்து நேற்று (12) கைதுசெய்தனர்.

15 Aug 2016

கடற்படையினரால் ஹம்பேகமுவையில் நீர் சத்திகரிப்பு இயந்திரம் நிறுவல்
 

சிறுநீரக நோயை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு கடற்படையினரால் மேட்கொள்ளப்படும் சமூக சேவைகள் திட்டத்தின் கீழ் ஹம்பேகமுவை விகாரையில் அப்பகுதி மக்களின் உபயோகத்திற்காக கடற்படையினரால் நிறுவப்பட்ட மேலும் ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் நேற்று (ஆகஸ்ட் 12) சிறுநீரக நோய் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் செயல்திட்ட பணிப்பாளர் அசேள இத்தவெல அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

13 Aug 2016

வருடாந்த கடற்படை ரிக்கிங் போட்டி - 2016

கடற்படையின் கப்பல் பிரிவு கட்டளையிடும் கொடி அதிகாரி மற்றும் அலுவலகர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட வருடாந்த கடற்படை ரிக்கிங் (கைற்று திறன்) போட்டி- 2016 திருகோணமலையிலுள்ள அட்மிரல் வசந்த கரன்னாகொட கேட்போர்கூடத்தில் கடந்த 12 திகதி (ஆகஸ்ட் 2016) நடத்தப்பட்டது.

13 Aug 2016

பேச்சப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கடற்படைத் தளபதியினால் பரிசில்கள் வழங்கி வைப்பு

கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முதலாவது தடைவயாக அனைத்து கடற்படை கட்டளைகளின் கடற்படை வீரர்களின் பங்குபற்றுதலுடன் பேச்சுப் போட்டி ஒன்று நடைபெற்றது. குறிப்பிட்ட இப்போட்டி சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகளின் பேச்சுத் திறனை விருத்தி செய்யும் வகையில் நடத்தப்பட்டது.

13 Aug 2016

மறைந்த தேசமானிய ஜெனரல் டெனிஸ் பெரேரா அவர்களின் நான்காவது நினைவுப் பேருரையில் கடற்படைத்தளபதி பங்கேற்பு

ஒய்வு பெற்ற கொடி தரவரிசை அதிகாரிகளின் சங்கத்தினால் நேற்று (11) கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மறைந்த தேசமானிய ஜெனரல் டெனிஸ் பெரேரா அவர்களின் நான்காவது நினைவுப் பேருரையில் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மற்றும் திருமதி யமூனா விஜேகுணரத்ன ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

12 Aug 2016

4.5 கிலோ கேரளா கஞ்சாவுடன் மூன்று பேர் கடற்படையினரால் கைது
 

வடமேல் கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட புத்தளம், இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னியின் வீரர்கள் புத்தளம் பொலிசாருடன் இணைந்து இரு வேறு பகுதிகளில் கேரளா கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூன்று சந்தேக நபர்களை நேற்று (11). கைது செய்தனர்.

12 Aug 2016

கடற்படை வரலாற்றின் முதலாம் “கடற்படையின் தலைமை பிரதான சிறு அதிகாரி” நியமனம்

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் எண்ணக்கருவில் கடற்படை வரலாற்றின் முதன் முறையாக “கடற்படையின் தலைமை பிரதான சிறு அதிகாரி” எனும் கடற்படை வீரர்களுக்கான ஒரு புதிய நியமனம் உருவாக்கப்பட்டுள்ளது.

11 Aug 2016

முதலாம் அமெரிக்க - இலங்கை செயல்பாட்டு நிலை இருதரப்பு பாதுகாப்பு உரையாடல்
 

இலங்கை பாதுகாப்பு படைகளுக்கும் ஐக்கிய அமெரிக்க பாதுகாப்பு படைகளுக்குமிடையிலான முதலாம் செயல்பாட்டு நிலை இருதரப்பு பாதுகாப்பு கருத்தரங்கு கடந்த 8ம் மற்றும் 9ம் (அகஸ்ட் 2016) தினங்களில் நடத்தப்பட்டது.

10 Aug 2016

கடலில் தத்தளித்த இந்திய மீனவர்களை காப்பாற்ற கடற்படை உதவி
 

மேற்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட விரைவு தாக்குதல் படகுகளான பி 417 மற்றும் பி 474 யின் கடற்படை வீரர்கள், இலங்கைக்கு மேற்கு கடலில் இயந்திர கோளாறு காரணமாக செயலிழந்து கடலில் ஆபத்தான நிலையில் தத்தளித்துக்கொண்டிருந்த 4 இந்திய மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி படகையும் நேற்று (ஆகஸ்ட் 8) மீட்டனர்.

09 Aug 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளை பிரதேசத்தின் நிலாவெளி, கடற்படை கப்பல் விஜயபா வின் கடற்படை வீரர்களால் இறங்கேனி கடலில் தனியிழை வலை மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 உள்நாட்டு மீனவர்கள் நேற்று (8) கைதுசெய்யப்பட்டனர்.

09 Aug 2016