நிகழ்வு-செய்தி

சொமுத்ரா அவிஜான் மற்றும் சொமுத்ரா ஜோய் கப்பல்களின் கட்டளை அதிகாரிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

நல்லெண்ண வியமொன்றை மேற்கொண்டு நேற்றைய தினம் (செப்டம்பர் 29) இலங்கையை வந்தடைந்த பங்களாதேச கடற்படை கப்பல்களான பிஎன்எஸ் சொமுத்ரா அவிஜான் மற்றும் பிஎன்எஸ் சொமுத்ரா ஜோய் ஆகியவற்றின் கட்டளை அதிகாரிகளான கப்டன் கம்ருல் ஹக் சவ்த்ரி மற்றும் கப்டன் எம் ஹுமாயன் கபீர் ஆகியோர் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து இன்று (செப்டம்பர் 30) சந்தித்தனர்.

30 Sep 2016

கேரள கஞ்சா வைத்திருந்த ஐந்து நபர்கள் கைது
 

வடமத்திய கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட கடற்படை கப்பல் கஜபா வின் வீரர்கள், மன்னார் பொலிசாருடன் இனைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் மன்னார் பிரதேசத்தில் வைத்து 4 கிலோ கேரள கஞ்சாவை பரிமாற்ற செய்வதில் ஈடுபட்டிருந்த 4 பேர்களை நேற்று (செப்டம்பர் 29) கைது செய்தனர்.

30 Sep 2016

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒருவர் கடற்படையினரால் கைது
 

தெற்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட தங்காலை, கடற்படை கப்பல் ருஹுனு வின் வீரர்கள் தங்காலை பொலிசாருடன் இணைந்து நாகுளுகமுவை பகுதியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது 3 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஒரு மீனவரை நேற்று ( செப்டம்பர் 29) கைது செய்தனர்.

30 Sep 2016

பரிந்துரைக்கப்படும் மருந்துகள் சகிதம் ஒருவர் கைது
 

கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் படி மேற்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட உஸ்வெடகைய்யாவை, கடற்படை கப்பல் களணி யின் வீரர்கள், மருந்துகள் மற்றும் உணவு ஊடாடல்கள் வாரியம் மற்றும் கம்பஹா பொலிசாருடன் இனைந்து பரிந்துரைக்கப்படும் மருந்துகள் (டிரமடோல்) அடங்கிய 10 பெட்டிகளை வைத்திருந்த ஒரு நபரை நேற்று (29 செப்டம்பர்) சீதூவையில் கைது செய்தனர்.

30 Sep 2016

இரண்டு பங்கலாதேச கடற்படை கப்பல்கள் கொழும்பு வருகை
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு பங்களாதேச கடற்படை கப்பல்களான பிஎன்எஸ் சொமுத்ரா அவிஜான் மற்றும் சொமுத்ரா ஜோய் இன்று (செப்டம்பர் 29) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

29 Sep 2016

அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்ட இரு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் திறந்துவைப்பு
 

கடற்படை தளபதியின் பணிப்பிட்கமைய நாடலாவ ரீதியில் கடற்படையினர் பல்வேறு சமுக நலத்திட்டங்களை பொது நலன் கருதி மேட்கொண்டுள்ளனர்.

29 Sep 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 2 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட சாம்பூர், கடற்படை கப்பல் பெரகும்பா வின் வீரர்கள் அன்றாட கடல் ரோந்து நடவடிக்கையின் போது சம்பூர் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைககளிள் ஈடுபட்ட 2 உள்நாட்டு மீனவர்களை நேற்று (செப்டம்பர் 28) கைது செய்தனர். அவர்களுடன் ஒரு படகும் கைப்பற்றப்பட்டது.

29 Sep 2016

கடற்படை தளபதி அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் நிஷா பிஸ்வாலுடன் சந்திப்பு
 

அமெரிக்கவிற்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்கள் தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர், நிஷா பிஸ்வாலை செவ்வாயன்று (செப்டம்பர் 27) சந்தித்து கலந்துரையாடினார்.

28 Sep 2016

திருகோணமலையில் கடல் பவள கண்காணிப்பு மற்றும் மீள்நடுகை நிகழ்ச்சி
 

நீல வளங்கள் குழு மற்றும் வன ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு அறக்கட்டளை, டோக்யோ சீமெந்து நிறுவனத்தாருடன் இனைந்து கடல் பவள பாறைகள் அளவியல் முறை தொடர்பான பயிற்சி பட்டறை மற்றும் கடல் பவள மீள்நடுகை நிகழ்ச்சி ஒன்றை இலங்கை கடற்படையின் சுளியோடிகளுக்காக திருகோணமலை கடற்படை தளத்தில் நடத்தினர்.

28 Sep 2016

கடற்படை தளபதி அமெரிக்க பெண்டகன் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுடன் சந்திப்பு
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள், அமெரிக்க பெண்டகனின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளை திங்களன்று (செப்டம்பர் 26) சந்தித்தார்.

28 Sep 2016