சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

வடமத்திய கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட மன்னார், கடற்படை கப்பல் கஜபா வின் வீரர்களால் கொண்டம்பிட்டி கடலில் தனியிழை வலை மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 உள்நாட்டு மீனவர்கள் நேற்று (செப்டம்பர் 21) கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் 2 படகுகளும் 2 தனியிழை வலைகளும் கைப்பற்றப்பட்டன.
22 Sep 2016
அனுராதபுரம் பசவக்குளத்தை சுத்தம் செய்ய கடற்படை உதவி
கடற்படை தளபதி அமெரிக்க கடற்படை செயற்பாட்டு தலைமை அதிகாரி மற்றும் பசிபிக் கடற்படைப் பிரிவு தளபதியுடன் சந்திப்பு

அமெரிக்காவின் ரோட் ஐலன்ட், நியூ போர்ட் நகரில் செப்டம்பர் 21 முதல் 23 வரை நடைபெறும் 22 ஆவது சர்வதேச கடற்பல (22nd International Seapower Symposium) கருத்தரங்கில் கலந்துகொண்டுள்ள கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள், அமெரிக்க கடற்படை செயற்பாட்டு தலைமை அதிகாரி அட்மிரல் ஜான் எம் ரிச்சட்சன் மற்றும் அமெரிக்க பசிபிக் கடற்படைப் பிரிவின் தளபதி அட்மிரல் ஸ்கொட் எச் ஸ்விப்ட் ஆகியோரை சந்தித்தார்.
21 Sep 2016