நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வடமத்திய கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட மன்னார், கடற்படை கப்பல் கஜபா வின் வீரர்களால் கொண்டம்பிட்டி கடலில் தனியிழை வலை மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 உள்நாட்டு மீனவர்கள் நேற்று (செப்டம்பர் 21) கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் 2 படகுகளும் 2 தனியிழை வலைகளும் கைப்பற்றப்பட்டன.

22 Sep 2016

சர்வதேச கடற்பல கருத்தரங்கில் கடற்படை தளபதி பங்கேற்பு
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள், அமெரிக்காவின் ரோட் ஐலன்ட், நியூ போர்ட் நகரில் நடைபெறும் 22 ஆவது சர்வதேச கடற்பல (22nd International Seapower Symposium) கருத்தரங்கில் நேற்று (செப்டம்பர் 21) கலந்துக்கொண்டார்.

22 Sep 2016

அனுராதபுரம் பசவக்குளத்தை சுத்தம் செய்ய கடற்படை உதவி
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் பணிப்பிட்கமைய மேட்கொள்ளப்படும் கடற்படையின் சமூக நல செயற்பாடுகளின் ஒரு அங்கமாக அநுராதபுரத்திலூள்ள பசவண் குளத்தில் நிறைந்து கிடந்த குப்பைகளை சுத்தம் செய்ய கடற்படை உதவியளித்துள்ளது.

21 Sep 2016

கடற்படை தளபதி அமெரிக்க கடற்படை செயற்பாட்டு தலைமை அதிகாரி மற்றும் பசிபிக் கடற்படைப் பிரிவு தளபதியுடன் சந்திப்பு

அமெரிக்காவின் ரோட் ஐலன்ட், நியூ போர்ட் நகரில் செப்டம்பர் 21 முதல் 23 வரை நடைபெறும் 22 ஆவது சர்வதேச கடற்பல (22nd International Seapower Symposium) கருத்தரங்கில் கலந்துகொண்டுள்ள கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள், அமெரிக்க கடற்படை செயற்பாட்டு தலைமை அதிகாரி அட்மிரல் ஜான் எம் ரிச்சட்சன் மற்றும் அமெரிக்க பசிபிக் கடற்படைப் பிரிவின் தளபதி அட்மிரல் ஸ்கொட் எச் ஸ்விப்ட் ஆகியோரை சந்தித்தார்.

21 Sep 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட உள்நாட்டு மீனவர் கடற்படையினால் கைது
 

வடமத்திய கடட்படை பிராந்தியத்திட்குட்பட்ட மன்னார், கடற்படை கப்பல் கஜபாவின் வீரர்களால், எருக்கலம்பிட்டி கடலில் தனியிழை வலை மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒரு உள்நாட்டு மீனவர் நேற்று (செப்டம்பர் 20) கைது செய்யப்பட்டார்.

21 Sep 2016

‘நீர்க்காக தாக்குதல்’ கொக்கிளாய் கடற்கரையில் நிறைவு
 

இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்படும் வருடாந்த ஒன்றிணைந்த களமுறைப் பயிற்சியான ‘நீர்க்காக தாக்குதல்’, திருகோணமலை, கொக்கிளாய் கடற்கரையில் இன்று (செப்டம்பர் 20) நிறைவுபெற்றது.

21 Sep 2016

மகா காஷ்யப வித்தியாலய மாணவர்களுக்கு கடற்படை தளபதி காலணிகள் அன்பளிப்பு
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் பணிப்பிட்கமைய மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மகா காஷ்யப வித்தியாலயத்தின் தரம் 1 முதல் 5 வரை மாணவர்களுக்கு காலணிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (செப்டம்பர் 19) அப்பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

20 Sep 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒரு உள்நாட்டு மீனவர் கடற்படையினரால் கைது
 

வடமத்திய கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட மன்னார், கடற்படை கப்பல் கஜபா வின் வீரர்களால் கொண்டம்பிட்டி கடலில் தனியிழை வலை கொண்டு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒரு உள்நாட்டு மீனவர் இன்று (செப்டம்பர் 19) கைது செய்யப்பட்டார்.

19 Sep 2016

கடற்படையினால் மரண இழப்பீடாக ஒரு மில்லியன் ரூபாய் கையளிப்பு
 

கடற்படையின் வைத்திய காப்புறுதி திட்டமான ‘நவிறு சவிய’ வின் கீழ் மரண இழப்பீடாக ஒரு மில்லியன் ரூபா, இலங்கை கடற்படையின் காலம்சென்ற பொரியியல் பிரிவு வீரர் ஜிஎஸ்எஸ் அபேவீர வின் மனைவியிடம் கையளிக்கப்பட்டது.

17 Sep 2016

8 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது
 

கொழும்பு துறைமுகத்திலுள்ள கடற்படை கப்பல், ரங்கள மற்றும் வெலிசறை, கடற்படை கப்பல் கெமுனு ஆகியவற்றின் வீரர்களால் 8 கிலோ கேரளா கஞ்சாவை கொண்டு சென்ற ஒருவர் கந்தானை பகுதியில் வைத்து நேற்று (செப்டம்பர் 15) கைதுசெய்யப்பட்டார்.

16 Sep 2016