நிகழ்வு-செய்தி

கடற்படையினால் போல்பித்திகமையில் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைப்பு
 

கடற்படையின் சமூக நலன்புரி சேவையின் ஒரு அங்கமாக போல்பித்திகமை கொருவெவ மஹாநாம மஹா வித்தியாலயத்தில் நீர் சுத்திகரிப்பு (RO Plant) இயந்திரமொன்று அங்கு கற்கும் மாணவர்களின் மற்றும் பிரதேச மக்களின் நன்மை கருதி நிறுவப்பட்டுள்ளது.

16 Sep 2016

சீன பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியை சந்திப்பு
 

சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர், சிரேஷ்ட கர்னல் லி ஷேங்ளின் மற்றும் பிரதி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கர்னல் சாங், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து இன்று (செப்டம்பர் 15) சந்தித்தனர்.

16 Sep 2016

கடற்படை அதிகாரிகளினால் கடற்படைக்கு சக்கர நாற்காலிகள் அன்பளிப்பு
 

சீன வுஹான் பல்கலைக்கழகத்தில் பல்வேறு கற்கை நெறிகளை பின்பற்றி நாடுதிரும்பிய கடற்படை அதிகாரிகள் குழுவொன்றினால் கடற்படைக்கு 10 சக்கர நாற்காலிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

15 Sep 2016

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 14 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட சாம்பூர், கடற்படை கப்பல் விதுர வின் வீரர்களால் சாம்பூர் பிரதேச கடலில் தனியிழை வலைகள் கொண்டு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 14 உள்நாட்டு மீனவர்கள் செப்டம்பர் 13ம் (2016) திகதி கைது செய்யப்பட்டார்கள்.

15 Sep 2016

இளநிலை வீரர்களுக்கான குடும்ப விடுதித் தொகுதி பாதுகாப்பு செயலாளரினால் வெலிசரையில் திறந்து வைப்பு

வேலிசறை கடற்படை முகாமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடற்படையின் திருமணமான இளநிலை வீரர்களுக்கான குடும்ப விடுதித் தொகுதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி அவர்களினால் இன்று (செப்டம்பர் 14) திறந்து வைக்கப்பட்டது.

14 Sep 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 4 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வடமத்திய கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட நாச்சாதூவை கடற்படை கப்பல் புவனேக வின் வீரர்களால் முந்தம்பிட்டி, பெரியாறு கடல் பிரதேசத்தில் தனியிழை வலைகள் கொண்டு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 4 உள்நாட்டு மீனவர்கள் நேற்று (செப்டம்பர் 13) கைது செய்யப்பட்டனர்.

14 Sep 2016

கடற்படையினால் மொனராகலையில் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு
 

விவசாய சமுகத்தினரிடையே சிறுநீரக நோயை தடுக்கும் வகையில் கடற்படையினரின் சமூக சேவை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மொனராகலை கஹகுருல்லன்பெலஸ்ஸ கனிஷ்ட வித்தியாலயத்தின் மாணவர்கள் மற்றும் மக்களின் உபயோகத்தித்காக ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை அங்கு கடற்படையினர் நிறுவியுள்ளனர்.

14 Sep 2016

வெளிச்செல்லும் விமானப்படை தளபதி, கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

வெளிச்செல்லும் விமானப்படை தளபதி எயார் மாஷல் ககன் புலத்சிங்ஹல அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து இன்று (செப்டம்பர் 13) சந்தித்தார்.

13 Sep 2016

‘வலவே சுப்பர் க்ராஸ் 2016’ போட்டியில் கடற்படைக்கு பல வெற்றிகள்
 

செவனகல பந்தய திடலில் செப்டம்பர் 11 ம் திகதி நடைபெற்ற ‘வலவே சுப்பர் க்ராஸ் 2016’ மோட்டார் சைக்கில் போட்டியில் கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்திய மோட்டார் சைக்கில் வீரர்கள் பல வெற்றிகளை சுவீகரித்துக் கொண்டனர்.

13 Sep 2016

கோபாலபுர கடலில் அடித்துச் செல்லப்பட்ட பெண் மீட்பு
 

கோபாலபுர கடலில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணொருவரை, கடற்படை கப்பல் விஜயபா வின் வீரர்கள் உட்பட கரையோர பாதுகாப்பு படையின் உயிர்காப்பு வீரர்கள் ஒன்றிணைந்து நேற்று (செப்டம்பர் 12) மீட்டனர்.

13 Sep 2016