நிகழ்வு-செய்தி
கற்பிட்டி புனித சிலுவை வித்தியாலயத்திட்கு தளபாடம் மற்றும் பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு
பழுதடைந்த நிலையில் காணப்பட்ட கற்பிட்டி புனித சிலுவை வித்தியாலயம், வடமேற்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் நிராஜ ஆட்டிகல அவர்களின் பணிப்பின் பேரில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
12 Sep 2016
‘ரணவிரு ரியல் ஸ்டார்’ போட்டியில் கடற்படைக்கு இரண்டாம் இடம்
பாதுகாப்பு படையினரின் பாடல் திறமைகளை வெளிக்காட்டு முகமாக பாதுகாப்பு அமைச்சினால் நடாத்தப்படும் ‘ரணவிரு ரியல் ஸ்டார்’ போட்டியின் இறுதி நிகழ்ச்சி அதி மேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று மாலை (செப்டம்பர் 11) சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
12 Sep 2016
‘நீர்காகம் தாக்குதல் 2016’ திருகோணமலை டொக்யாடில்
இலங்கை பாதுகாப்பு படைகளின் வருடாந்த கூட்டு இராணுவ பயிற்சி, ‘நீர்காகம் தாக்குதல் 2016’ ன் ஒரு கட்டமாக கடற்படையின் கப்பல் படை பிரிவு, காலாட் பிரிவு, சிறப்பு படகு படை மற்றும் இராணுவ, விமானப்படை பிரிவுகளின் ஒன்றிணைந்த பயிற்சி நடவடிக்கைகள் நேற்று (செப்டம்பர் 10) திகதி திருகோணமலை கடற்படை டொக்யாடில் (கப்பல் பட்டறை) நிறைவு பெற்றது.
12 Sep 2016
நீருக்கடியில் வெடிக்காத வெடிபொருள் மீட்பு பயிற்சி திருகோணமலையில் நிறைவு
இலங்கை கடற்படை சுழியோடிகலுக்காக அமெரிக்க கடற்படை வெடிபொருள் அகற்றும் பிரிவு 5 தினால் நடத்தப்பட்ட நீருக்கடியில் வெடிக்காத வெடிபொருள் மீட்பு பயிற்சி 2016 செப்டம்பர் 08 ம் திகதி திருகோணமலையில் வைத்து நிறைவு
11 Sep 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 3 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திகுட்பட்ட நிலாவெளி, கடற்படை கப்பல் விஜயபா வின் வீரர்களால் நிலாவெளி பிரதேச கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 3 உள்நாட்டு மீனவர்கள் நேற்று (செப்டம்பர் 9) கைது செய்யப்பட்டனர்.
10 Sep 2016
கடற்படை தளபதி யாழ்பாணத்தில் மதுசார மற்றும் போதைபொருள் எதிர்ப்பு நிகழ்வில் பங்கேற்பு
அதி மேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் யாழ்பாணம், துரையப்பா மைதானத்தில் இன்று (செப்டம்பர் 9) நடைபெற்ற “மதின் நிதஹஸ் ரட்டக்- போதைபொருள் மற்றும் மதுசாரம் அற்ற ஒரு நாடு” எனும் நிகழ்வின் பிரதம அத்தியாக பங்கேற்று சிறப்பித்தார்.
09 Sep 2016
போலி ஆவணங்கள் தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் இருவர் தடுப்பு
கிடைக்கபெற்ற தகவலுக்கமைய தெற்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட கடற்படை கப்பல் தக்ஷின வின் வீரர்கள், காலி பொலிசாருடன் ஒருங்கிணைந்து காலி கலங்கரை விளக்கை அண்டிய பிரதேசத்தில் போலி ஆவணங்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ஒரு அறையை சோதனையிட்டனர்.
09 Sep 2016
சட்டவிரோத கடலட்டை சேகரிப்பில் ஈடுபட்ட 5 மீனவர்கள் கடற்படையினரால் கைது
வடக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட வெத்திளைகேணி கடற்படை காவலரணின் வீரர்களால் சட்டவிரோத கடலட்டை சேகரிப்பில் ஈடுபட்ட 5 மீனவர்கள் நேற்று (செப்டம்பர் 6) கைது செய்யப்பட்டார்கள்.
07 Sep 2016
பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தலைவர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் நாசிர் அஹ்மத் பட், இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து இன்று (செப்டம்பர் 7) சந்தித்தார்.
07 Sep 2016
சம்பத்நுவரவில் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறந்துவைப்பு
விவசாய சமுகத்தினரிடையே சிறுநீரக நோயை தடுக்கும் வகையில் கடற்படையினரின் மற்றுமொரு சமூக சேவை நிகழ்ச்சித் திட்டமாகசம்பத்நுவர மகா வித்தியாலயத்தில் நீர்சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு இன்று (செப்டம்பர்.6) திறந்து வைக்கப்பட்டது.
07 Sep 2016