நிகழ்வு-செய்தி

டிங்கி படகில் ஏற்பட்ட தீ அனர்த்தம் கட்டுப்படுத்த கடற்படை ஆதரவு

நுவரெலியா கிரிகோரி ஏரியின் இறங்குதுறையில் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் படகில் இன்று (2020 பிப்ரவரி 13) திடீரென ஏற்பட்ட தீயை அணைக்க கடற்படை உதவியது.

13 Feb 2020

தலைமன்னார் புகையிரத நிலையத்தை சுத்தம் செய்ய கடற்படை உதவி

மனித நடவடிக்கைகள் மற்றும் இயற்கை காரணங்களினால் தூய்மையற்ற தலைமன்னர் புகையிரத நிலையம் 2020 பிப்ரவரி 11 ஆம் திகதி கடற்படையால் சுத்தம் செய்யப்பட்டது.

13 Feb 2020

கடற்படைத் தளபதி வடமேற்கு கடற்படை கட்டளைக்கு வருகை

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா 2020 பிப்ரவரி 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் வடமேற்கு கடற்படை கட்டளைக்கு விஜயம் செய்தார். வடமேற்கு கடற்படைப் கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ருவன் பெரேரா கடற்படைத் தளபதியை சிறப்பு வணக்கத்துடன் அன்புடன் வரவேற்றார்.

12 Feb 2020

ஆழ்கடலில் நடைபெறுகின்ற குற்றங்களை அடக்குவது பற்றிய கலந்துரையாடலொன்று கடற்படையால் மேற்கொள்ளப்பட்டது

இலங்கை கடற்படை ஏற்பாடு செய்த ஆழ்கடல் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத சவால்கள் என்ற தலைப்பில் பலதரப்பு கலந்துரையாடல் 2020 பிப்ரவரி 10 அன்று கொழும்பில் உள்ள கலங்கரை விளக்கம் உணவகத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

12 Feb 2020

கடற்படை சேவா வனிதா பிரிவின் சமுக நலத் திட்டம்

கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் மேற்கொள்ளப்படுகின்ற மற்றொரு சமுக நலத் திட்டம் 2020 பிப்ரவரி 11 ஆம் திகதி சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அருந்ததி உதிதமாலா ஜயனெத்தி தலைமையில் கடற்படை தலைமையகத்தில் செயல்படுத்தப்பட்டது.

12 Feb 2020

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சுழியோடி உபகரணங்களைப் பயன்படுத்திய இருவர் கடற்படையால் கைது

மன்னார் பல்லேமுனை கடற்கரையில் ரோந்து செல்லும் போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சுழியோடி உபகரணங்களை பயன்படுத்திய இரண்டு நபர்கள் 2020 பிப்ரவரி 11 அன்று கடற்படையால் கைது செய்யப்பட்டனர்

12 Feb 2020

கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களை (02) கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸார் கூட்டாக இனைந்து 2020 பிப்ரவரி 11 ஆம் திகதி முத்துர் பகுதியில் நடந்திய சோதனை நடவடிக்கையின் போது சுமார் 500 கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

12 Feb 2020

பொது மன்னிப்பு காலத்தில் 773 கடற்படை வீரர்கள் கடற்படை முகாம்களில் சரணடைந்துள்ளனர்

72 வது சுதந்திர தினத்திற்கு இணையாக அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தில் இதுவரை முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் கடற்படையில் இருந்து வெளியேறிய 773 கடற்படை வீரர்கள் மீண்டும் தளங்களுக்கு அறிக்கை அளித்துள்ளனர்.

12 Feb 2020

கடலாமை இறைச்சியுடன் ஒரு நபர் கடற்படையால் கைது

இலுப்புகடவாய் பகுதியில் 2020 பிப்ரவரி 11, ஆம் திகதி மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையில் கடல் ஆமை இறைச்சியுடன் ஒருவரை கடற்படையால் கைது செய்யப்பட்டது.

12 Feb 2020

இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் பிரதிநிதிகளுக்காக இலங்கை கடற்படை மற்றொரு பாடத்திட்டத்தை திருகோணமலையில் நடத்துகிறது

ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் நிறுவனத்தின் பங்காளிகள் சார்பாக நடத்தப்படுகின்ற கப்பல்கள் மற்றும் கப்பல்களுக்கான அணுகல், நடைமுறைகள் மற்றும் ஆய்வுக்கான நடைமுறைகள் பயிற்சியின் மற்றொரு பாடநெறி 2020 பிப்ரவரி 10 ஆம் திகதி திருகோணமலை சிறப்பு படகுப் படை தலைமையகப் பயிற்சி பாடசாலையில் தொடங்கியது.

11 Feb 2020