நிகழ்வு-செய்தி

கெலனி ஆற்றில் மூழ்கிக் கொண்டிருந்த நபர் கடற்படையால் மீட்பு

பேலியகொடை புதிய கெலனி பாலம் அருகே கெலானி ஆற்றில் மூழ்கிக் கொண்டிருந்த ஒருவரை மீட்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

19 Apr 2020

செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் (01) கடற்படையால் கைது

2020 ஏப்ரல் 18 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்திற்கு வெளியே உள்ள கடல் பகுதியில் செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஒருவரை (01) கடற்படை கைது செய்தது.

19 Apr 2020

தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக கடற்படையினரால் நடத்தப்பட்டு வரும் தொடர் இன்னிசை நிகழ்ச்சிகள்

கொழும்பு பகுதியில் மாடி கட்டடங்களில் சுய தனிமைப்படுத்தப்பட்ட மக்களின் கவலை மற்றும் மன அழுத்தத்தை தவிர்ப்பதற்காக கடற்படையினரால் நடத்தப்பட்டு வரும் இன்னிசை நிகழ்ச்சி தொடரின் மேலும் ஒரு இசை நிகழ்ச்சி 2020 ஏப்ரல் 18 ஆம் திகதி ராஜகிரிய மாடி வீடு கட்டிடம் மையமாகக் கொண்டு இடம்பெற்றது.

19 Apr 2020

ஒலுவில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்ட நபர்களின் மூன்று (03) நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்தது.

ஒலுவிலில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்ட மூன்று நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதுடன் கடற்படை உடனடியாக 2020 ஏப்ரல் 18 அன்று அவர்களை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளது.

19 Apr 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவருடன் தொடர்பு கொண்டிருந்த மேலும் ஆறு நபர்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவருடன் தொடர்பு கொண்டிருந்த கிராண்ட்பாஸ், கொட்டாஞ்சேனை, மாலிகாவத்த மற்றும் புஞ்சி பொரெல்ல பகுதிகளில் வசிக்கும் ஆறு (06) நபர்களை இன்று (2020 ஏப்ரல் 16,) தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு அனுப்ப கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

18 Apr 2020

அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன் சட்டவிரோதமாக கொண்டு சென்ற வேளாண் வேதிப்பொருட்களை கடற்படையால் கைப்பற்றப்பட்டது

2020 ஏப்ரல் 18 ஆம் திகதி மெதவச்சி பூனேவ பகுதியில் உள்ள கடற்படை சாலைத் தடையில், வைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன் வேளாண் வேதிப்பொருட்களைக் கொண்டு சென்ற ஒரு லாரி வண்டியை கடற்படை கைப்பற்றியது.

18 Apr 2020

பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 09 நபர்கள் புறப்பட்டு சென்றனர்

பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 09 நபர்கள் இன்று (2020 ஏப்ரல் 18) தங்குடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

18 Apr 2020

செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு (04) நபர்கள் கடற்படையால் கைது

2020 ஏப்ரல் 17 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்திற்கு வெளியே உள்ள கடல்பகுதியில் செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 04 பேரை கடற்படை கைது செய்தது.

18 Apr 2020

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த ஒருவர் கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் காவல்துறை இணைந்து 2020 ஏப்ரல் 17 ஆம் திகதி கல்முனை பகுதியில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

18 Apr 2020

போதைப் பொருள் கொண்ட மூன்று நபர்கள் கடற்படையினரால் கைது

2020 ஏப்ரல் 16 ஆம் திகதி கடற்படை பொலிஸாருடன் புல்முடை யான் ஓய சாலைத் தடையில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தேடலின் போது கஞ்சா மற்றும் ஹெராயின் வைத்திருந்த 03 சந்தேக நபர்கள் கைது செய்யப்’பட்டனர்.

17 Apr 2020