வெலிசர கடற்படையினர் நினைவுச்சின்னத்திற்கு புதிய கடற்படை தளபதி மலர் அஞ்சலி செலுத்தினார்

இலங்கை கடற்படையின் 24 வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்கள் கடற்படை தளபதியாக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக இன்று (2020 ஜூலை 31) வெலிசரவுள்ள கடற்படையினர் நினைவுச்சின்னம் அருகில் பயங்கரவாதத்தை நீக்கும் நடவடிக்கைகளின் போது தாய் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த மற்றும் காணாமல் போன கடற்படையினர் நினைவு கூறி மலர் அஞ்சலி செலுத்தினார்.
31 Jul 2020
கடற்படையின் பூஸ்ஸ மற்றும் கற்பிட்டி தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு மேலும் 21 நபர்கள் வெளியேறினர்
இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் புதிய கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
பூஸ்ஸ மற்றும் கற்பிட்டி கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு மேலும் 42 நபர்கள் வெளியேறினர்
சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகளை மற்றும் கடற்கரை பகுதிகளை பாதுகாக்க கடற்படையின் பங்களிப்பு
இலங்கை கடற்படை கப்பல் ஜகதாவின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கமாண்டர் கிரிஷாந்த ரணசிங்க பொறுப்பேற்றார்
கடற்படையின் புதிய தளபதி மிரிசாவெடியவுக்கு மரியாதை செலுத்தி எதிர்காலத்திற்கான ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன 2020 ஜூலை 25 அன்று அனுராதபுரத்தில் உள்ள மிரிசாவெட்டிய விகாரைக்குச் சென்று ஆசீர்வாதங்களைப் பெற்றார். இந்த நிகழ்வில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவர் திருமதி சந்திமா உலுகேதென்ன, கடற்படை தளபதியின் அன்பு மனைவி மற்றும் கடற்படையின் பல மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
25 Jul 2020
கடற்படைத் தளபதி ஜெய ஸ்ரீ மகா போதி வழிபட்டு ஆசீர்வாதங்களைப் பெற்றார்

கடற்படையின் 24 வது தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்ட வைஸ் வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, ஜூலை 25, 2020 அன்று அனுராதபுரத்தில் உள்ள ஜெய ஸ்ரீ மகா போதிக்கு மரியாதை செலுத்தி ஆசீர்வாதங்களைப் பெற்றார். இந்நிகழ்ச்சியில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவர் திருமதி சந்திமா உலுகேதென்னா, கடற்படை தளபதியின் அன்பு மனைவி மற்றும் கடற்படையின் பல மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
25 Jul 2020