நிகழ்வு-செய்தி

கொமாண்டர் பராக்ரம சமரவீர நினைவு உள்ளரங்க விளையாட்டு வளாகம் வெலிசர கடற்படை வளாகத்தில் திறக்கப்பட்டது

புதிதாக கட்டப்பட்ட இலங்கை கடற்படை உள்ளரங்க விளையாட்டு வளாகம் கொமாண்டர் பராக்ரம சமரவீர நினைவு உள்ளரங்க விளையாட்டு வளாகம் என்று பெயரிடப்பட்டு இன்று (2021 ஜூன் 23) கடற்படைத் தளபதி மற்றும் கடற்படை விளையாட்டு வாரியத்தின் தளபதியுமான வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலமையில் மற்றும் கொமாண்டர் (இறந்த) பராக்ரம சமரவீர கடற்படை அதிகாரியின் அன்புள்ள மனைவி திருமதி சுதர்ஷனி சமரவீரவின் பங்கேற்புடன் வெலிசர கடற்படை வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

23 Jun 2021

“நீர்வளவியலில் நூறு ஆண்டுகால சர்வதேச ஒத்துழைப்பு” - இலங்கை கடற்படை நீர்நிலை சேவை உலக நீர்நிலை தினத்தை கொண்டாடுகிறது.

மனிதன் நீர் வழியாக செல்லத் தொடங்கியதிலிருந்தே நீர்நிலை முக்கிய பங்கு வகிக்கிறது. கண்டங்களுக்கு செல்ல ஒரு கடல் வரைபடம் தேவைப்பட்டதுடன் மேலும் தரவு சேகரிப்பு முதல் வரைபடம் வரை சர்வதேச தரங்களின் மிக உயர்ந்த தரநிலைகள் வரை அனைத்து பணிகளையும் செய்ய நீர்நிலை பயன்படுத்தப்பட்டது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு தேவையான நீர் தொடர்பான அளவீடுகளை மேற்கொள்வதன் மூலம் தேசிய தேவைகளை பூர்த்தி செய்வதில் நீர்நிலை சேவை பெரும் பங்களிப்பை செய்கிறது. இலங்கை உட்பட 94 நாடுகளின் உறுப்பினர்களைக் கொண்ட சர்வதேச ஹைட்ரோகிராஃபிக் அமைப்பு (International Hydrographic Organization) , 15 பிராந்திய ஹைட்ரோகிராஃபிக் கமிஷன்கள் (Regional Hydrographic Commissions) மூலம் உலகளவில் நீர்நிலை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறது. இந்த அமைப்பு 1921 ஜூன் 21, இல் மொனாக்கோவில் நிறுவப்பட்டது, மேலும் 2021 ஜூன் 21, அன்று அதன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது.

21 Jun 2021

ஜப்பானிய சுய பாதுகாப்பு கடல்சார் படைக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையிலான கடற்படைப் பயிற்சி

ஜப்பானிய சுய பாதுகாப்பு கடல்சார் படையின் ' KASHIMA ' மற்றும் ' SETOYUKI ' என்ற இரண்டு பயிற்சி போர்க்கப்பல்கள் (02) மூன்று நாள் (03) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2021 ஜூன் 18 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்ததுடன் இன்று (20 ஜூன் 2021) இலங்கையில் இருந்து புறப்படும் போது குறித்த கப்பல்கள் இலங்கை கடற்படையுடன் பயிற்சியொன்று மேற்கொண்டுள்ளது.

20 Jun 2021

கடற்படையினரால் தலைமன்னார் பிரதேச வைத்தியசாலையில் நிறுவப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பொது மக்களுக்காக திறந்து வைப்பு

இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் சமூக நல திட்டங்களின் ஒரு பகுதியாக தலைமன்னார் பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சஞ்சீவ டயஸ் அவர்களால் 2021 ஜூன் 19 அன்று திறந்து வைக்கப்பட்டது.

20 Jun 2021

பிரதான பழுதுபார்ப்புகளுக்குப் பிறகு சீஜி 405 படகு கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டது

இலங்கை கடற்படை மூலம் பிரதான பழுதுபார்ப்பு (Major refit) நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட இலங்கை கடலோர காவல்படையின் சீஜி 405 படகு மீண்டும் இலங்கை கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கும் நிகழ்வு வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் 2021 ஜூன் 16 ஆம் திகதி இடம்பெற்றது.

18 Jun 2021

ரியர் அட்மிரல் சனத் உத்பல கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

34 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் சனத் உத்பல இன்று (2021 ஜூன் 14) ஓய்வு பெற்றார்.

14 Jun 2021

தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் உபுல் டி சில்வா கடமையேற்பு

இலங்கை தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் உபுல் டி சில்வா இன்று (ஜூன் 14, 2021) இலங்கை தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்ட பின் கடற்படைத் தலைமைகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.

14 Jun 2021

பூஸ்ஸ இடைநிலை சிகிச்சை மையத்திற்கு பல மருத்துவ உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையால் பராமரிக்கப்படும் பூஸ்ஸ கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையத்திற்குத் தேவையான மருத்துவ பொருட்கள், படுக்கைகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை லீசன்ஸ் வைத்தியசாலை மற்றும் டயலொக் நிருவனம் மனுசத் தெரண மனிதாபிமான செயல்பாட்டுத் திட்டத்துடன் இணைந்து தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரசன்ன ஹெவகேவிடம் வழங்கும் நிகழ்வு 2021 ஜூன் 04 மற்றும் 11 ஆம் திகதிகளில் தெற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

12 Jun 2021

வட கடலில் செயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்கும் திட்டம்

கடற்படையின் உதவியுடன் மீன்வள மற்றும் நீர்வளத் துறை இன்று (ஜூன் 11, 2021) நெடுந்தீவு கடல் பகுதியில் செயற்கை பாறைகளை வளர்ப்பதற்கான ஒரு திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் மூலம், யாழ்ப்பாண தீபகற்பத்தில் உள்ள தீவுகளுக்கு வெளியே உள்ள கடலோர நீரில் பல்லுயிர் பெருக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

11 Jun 2021

இந்திய கடலோர காவல்படையின் ‘சமுத்ர பிரஹாரி’, 'வஜ்ரா' மற்றும் 'வெபாவு' ஆகிய கப்பல்களின் பங்களிப்பை கடற்படைத் தளபதியின் பாராட்டுக்கு

2021 மே மாதம் 20 ஆம் திகதி கொழும்பு துறைமுக கடல் பகுதியில் தீ விபத்துக்குள்ளான MV X-PRESS PEARL என்ற கப்பலில் பேரழிவு நிலைமையை நிர்வகிக்க மற்ற பங்குதாரர்களுடன் இணைந்து செய்த சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இன்று (ஜூன் 10, 2021)கொழும்பு துறைமுகத்தில் வைத்து இந்திய கடலோர காவல்படையின் ‘சமுத்ர பிரஹாரி’(ICGS Samudra Prahari ), 'வஜ்ரா' (ICGS Vajra) மற்றும் 'வெபாவு' (ICGS Vaibhav) ஆகிய கப்பல்களின் கட்டளை அதிகாரிகளுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன பாராட்டு கடிதங்களை வழங்கினார்.

10 Jun 2021