சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 15 நபர்கள் கடற்படையினரால் கைது

சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தல் மூலம் கடல் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி 2020 ஜூலை 25 மற்றும் 28 ஆகிய திகதிகளில் திருகோணமலை, கின்னியா, முல்லைதீவு மற்றும் நிலாவேலி கடல் பகுதிகளில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கைகளினால் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 15 நபர்கள் மற்றும் மீன்பிடி பொருட்கள் ஆகியவை கடற்படையால் கைது செய்யப்பட்டன.

கிழக்கு கடற்படை கட்டளை மூலம் திருகோணமலை, கின்னியா, முல்லைதீவு மற்றும் நிலாவேலி கடல் பகுதிகள் மையமாக கொண்டு நடத்தப்பட்ட இந்த நடவடிக்கைகள் மூலம் 04 சட்டவிரோத மீன்பிடி வலைகள், 04 டிங்கி படகுகள், பல மீன்பிடி பொருட்கள் மற்றும் 15 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக முல்லைதீவு உதவி மீன்வள இயக்குநர், குச்சவேலி மீன்வள ஆய்வாளர், மற்றும் இலங்கை கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய இயக்குனர் மூலம் திருகோணமலை மீன்வளத்துறை உதவி இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.