கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவரை கரைக்கு கொண்டு வர கடற்படையின் உதவி

கடலில் நோய்வாய்ப்பட்ட ஒரு மீனவரை மருத்துவ சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர இன்று (2020 ஆகஸ்ட் 03,) இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

2020 ஜூலை 29 ஆம் திகதி காலி மீன்வளத் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட ‘யசிரு புத்தா’ என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலில் இருந்த ஒரு மீனவர் மாரடைப்பால் நோய்வாய்ப்பட்டுள்ளதாக கடற்படை தலைமையகத்தில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு மீன்பிடி மற்றும் நீர்வள திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட தகவலுக்கு அமைய உடனடியாக இலங்கை கடற்படையின் தெற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான துரித தாக்குதல் படகொன்று மீனவரை கரைக்கு கொண்டுவர அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, காலியில் இருந்து சுமார் 50 மைல் (92 கி.மீ) தொலைவில் தென் கிழக்கு கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட குறித்த மீனவரை தற்போதய கோவிட் -19 தொற்றுநோயை ஒழிக்க வழங்கப்பட்ட சுகாதார நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு மீன்பிடிப் படகில் இருந்து மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. நோயாளியை படகில் இருந்து மீட்டெடுத்த பின் கடற்படை மருத்துவ குழுவினரால் நோயாளிக்கு முதலுதவிகள் அளிக்கப்பட்டு, கடற்படை படகின் மூலம் காலி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் அவர் மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

இலங்கைக்கு சொந்தமான கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மண்டலத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பொறுப்பை இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, மேலும் முந்தைய பல சந்தர்ப்பங்களில் பிராந்தியத்தில் துன்பகரமான மீன்பிடி மற்றும் கடற்சார் சமூகத்திற்கு கடற்படை உதவியுள்ளது. மேலும், சர்வதேச மரபுகளின்படி கடலில் உயிர் பாதுகாப்பு குறித்த தனது பொறுப்பை நிறைவேற்ற கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.