சட்டவிரோதமாக இந்நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட உலர்ந்த மஞ்சள் தொகையை மன்னார் மற்றும் நுரைச்சோலை கடற்கரைகளில் வைத்து கடற்படையால் கைது செய்யப்பட்டன

சட்டவிரோதமாக இந்நாட்டுக்கு கொண்டுவர முட்பட்ட 807 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் தொகையை மன்னார் வங்காலை மற்றும் நுரைச்சோலை தலுவ கடற்கரைகளில் வைத்து 2020 ஆகஸ்ட் 18 ஆம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்டன.

சட்டவிரோதமான குடியேறியவர்கள் நாட்டிற்குள் வருவதையும், கடல் வழியாக சட்டவிரோதமான பொருட்கள் நாட்டிற்குள் கடத்தப்படுவதையும் தடுக்க இலங்கை கடற்படை தொடர்ச்சியான ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் நுரைச்சோலை தலுவ கடற்கரையில் மேற்கொண்டுள்ள விசேட ரோந்து நடவடிக்கையின் போது இரண்டு டிங்கி படகுகளில் மறைத்து சட்டவிரோதமாக இந்நாட்டுக்கு கொண்டுவர முட்பட்ட 700 கிலோ கிராம் (14 சாக்குகள்) உலர் மஞ்சளுடன் கற்பிட்டி பகுதியில் வசிக்கும் 25 முதல் 58 வயதுக்குட்பட்ட நான்கு (04) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதேபோன்று வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் மன்னார் வங்காலை கடற்கரையில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது கடற்கரையில் இருந்த இரண்டு சந்தேகத்திற்கிடமான சாக்குகளை ஆய்வு செய்தனர். அங்கிருந்து சுமார் 107 கிலோ கிராம் (ஈரமான எடை) மஞ்சளை கண்டுபிடித்தனர்.

அதன்படி, கடந்த மூன்று (03) வாரங்களாக பல சந்தர்ப்பங்களில் கடல் வழியாக நாட்டிற்கு கடத்தப்பட்ட 8245 கிலோவிற்கும் அதிகமான உலர்ந்த மஞ்சளை கடற்படை கைப்பற்றியது. மேலும், மன்னார் வங்காலை மற்றும் நுரைச்சோலை தலுவ கடற்கரைகளில் வைத்து பறிமுதல் செய்யப்பட்ட உலர் மஞ்சள், டிங்கி படகுகள் மற்றும் சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சின்னபாடு மற்றும் யாழ்ப்பாண சுங்க அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டனர். கொவிட் - 19 நிலவும் நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த கடற்படை நடவடிக்கைகள் அனைத்தும் சுகாதார அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க நடத்தப்பட்டன.