696 கிராம் ஐஸ் போதைப்பொருள் கொண்ட 04 சந்தேக நபர்கள் கடற்படை உதவியுடன் கைது

கடற்படை மற்றும் கதிர்காமம் பொலிஸ் சிறப்பு பணிக்குழு ஒருங்கினைந்து 2020 செப்டம்பர் 02 ஆம் திகதி திஸ்ஸமஹாராமய, பன்னேகமுவ மற்றும் தெபரவெவ பகுதிகளில் மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது ஐஸ் (Crystal Methamphetamine) போதைப்பொருள் கொண்ட நான்கு (04) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் இலங்கை கடற்படை, நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருட்களைத் தடுப்பது குறித்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தெற்கு கடற்படை கட்டளை மற்றும் கதிர்காமம் பொலிஸ் சிறப்பு பணிக்குழு ஒருங்கினைந்து 2020 செப்டம்பர் 02 ஆம் திகதி திஸ்ஸமஹாராமய, பன்னேகமுவ பகுதியில் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது 02 சந்தேக நபர்கள் கண்டு பிடிக்கப்பட்டதுடன் குறித்த சந்தேக நபர்களை விசாரித்தபோது சுமார் 9 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த சந்தேக நபர்களை விசாரித்த போது மற்றொரு சந்தேக நபர் சுமார் 06 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். பின்னர் மேற்கொண்டுள்ள மேலதிக விசாரணையின்போது, மற்றொரு சந்தேக நபர் திஸ்ஸமஹாராம, தெபரவெவ பகுதியில் 681 கிராம் ஐஸ் போதைப்பொருட்களை மோட்டார் சைக்கிளில் விற்பனைக்கு கொண்டு செல்லும் போது கைது செய்யப்பட்டார். இந்த முழு நடவடிக்கை மூலம் 696 கிராம் ஐஸ் போதைப்பொருள், 04 சந்தேக நபர்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவ்வாரு கைது செய்யப்பட்ட நபர்கள் அதே பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் போதைப்பொருள் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மேலதிக விசாரணைகளுக்காக திஸ்ஸமஹாராம காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.