செய்தி வெளியீடு


“பனமா கொடி கொண்ட New Diamond எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ” என்ற தலைப்பில் 2020 செப்டம்பர் 05 அன்று 1130 மணிக்கு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தொடர்பானது.

பாதிக்கப்பட்ட கப்பல் இப்போது கரையிலிருந்து சுமார் 40 கடல் மைல் (சுமார் 74 கி.மீ) தொலைவில் உள்ளது மற்றும் இலங்கை கடற்படை மற்றும் பிற பங்குதாரர்கள் தொடர்ந்து தீயணைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர், மேலும் தீயை அணைக்கும் எண்ணெய் கப்பல் மீது தீயை அணைக்கும் இரசாயனங்கள் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி குளிரூட்டும் விளைவை ஏற்படுத்துகின்றனர். இன்று பிற்பகல், இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான அமியா மற்றும் அபிக் ஆகிய இரண்டு கப்பல்களும் (02) இந்த நடவடிக்கையில் இணைந்தன.

இன்றைய காலையில், பாதிக்கப்பட்ட கப்பல் உள்ள கடல் பகுதி கரடுமுரடானது மற்றும் கடல் காற்றின் வேகத்தில் அதிகரிப்பு இருந்தது. எவ்வாறாயினும், தீ விபத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக நாள் முழுவதும் பேரழிவு நிவாரண நடவடிக்கை தொடர்ந்தது. இந்த ஆபத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அவசர விஷயமாகக் கருதி இலங்கை கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் (MEPA) தலையீட்டால் இலங்கை துறைமுக ஆணையம்(SLPA) (5000 லீட்டர்), ஹம்பன்டோட்டா சர்வதேச துறைமுகக் குழு (HIPG) (4600 லீட்டர்), கொழும்பு கப்பல்துறை லிமிடெட் (CDL) (1000 லீட்டர்), இலங்கை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (CPC) (2100 லீட்டர்), இந்திய எண்ணெய் கழகம் (IOC) (3000) லீட்டர்) மற்றும் சிலோன் பெட்ரோலியம் ஸ்டோரேஜ் டெர்மினல்ஸ் லிமிடெட் (CPSTL) (2800 லீட்டர்) ஆகியவை தீயை அணைக்கும் ரசாயனங்களை கடற்படைக்கு வழங்கின.

இதற்கிடையில், கப்பலின் உரிமையாளரின் தலையீட்டில் மீட்பு நடவடிக்கை நிபுணர்கள், பேரழிவு மதிப்பீட்டாளர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்கள் உள்ளிட்ட 10 பிரிட்டிஷ் மற்றும் நெதர்லாந்து நிபுணர்கள் நாளை காலை மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு வருவார்கள். இந்த வல்லுநர்கள் குழு இலங்கை கடற்படையின் துரித தாக்குதல் படகு மூலம் கல்முனையில் இருந்து தற்போது பாதிக்கப்பட்டுள்ள கப்பல் இருக்கும் கடல் பகுதிக்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட கப்பலில் இருந்த 23 பணியாளர்களில், விபத்தில் சிக்கி இறந்துவிட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற நபர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் மற்றும் இந்திய கடலோர காவல்படை கப்பலில் இருக்கின்ற பாதிக்கப்பட்ட கப்பலின் கேப்டன் தவிர மற்ற 20 உறுப்பினர்களும் இலங்கை கடற்படைக் கப்பல்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவினருக்கு நாளை தங்கள் குடும்பத்தினரை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள தேவையான வசதிகள் வழங்க கடற்படை திட்டமிட்டுள்ளது.

அதன்படி, இலங்கை கடற்படைக்கு சொந்தமான மூன்று கப்பல்கள் (03) மற்றும் மூன்று துரித தாக்குதல் கப்பல்கள் (03), இலங்கை கடலோர காவல்படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் (02), இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான மூன்று கப்பல்கள் (03), இந்திய கடற்படைக்கு சொந்தமான ஒரு கப்பல், ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் குழுவின் இராவணா மற்றும் வசம்ப டக் படகுகள், பாதிக்கப்பட்டுள்ள கப்பலின் வெளிநாட்டு நிறுவனம் தயாரித்த ALP Winger டக் படகு, ஆழ்கடல் தீயணைப்பு வீரர்கள் கொண்ட டி.டி.டி 1 (TTT One) டக் படகு (01) இந்த தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், இலங்கை விமானப்படையின் எம்ஐ 17 ஹெலிகாப்டர் மற்றும் பீச் கிராஃப்ட் ஆகியவை இந்த நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவி வழங்கியது.

இன்று காலை நிலவரப்படி, இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான இரண்டு (02) டோர்னியர் விமானங்கள் அவசரகால பயன்பாட்டிற்காக மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தன, அவற்றில் ஒன்று பாதிக்கப்பட்ட கப்பலின் தற்போதைய நிலையை கண்காணித்து செயல்பாட்டுக் குழுக்களுக்கு தெரிவித்த பின்னர் மீண்டும் இந்தியா நோக்கி சென்றது, மேலும். மற்ற விமானம் இப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபடுகின்றது.

இலங்கை கடற்படை மற்றும் பேரழிவு தணிப்பு நடவடிக்கைக் குழுக்கள் கப்பலில் தீ பரவுவதை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளன, இதுவரை இந்த கப்பலில் இருந்து கடலுக்கு எண்ணெய் கசிவு ஏற்படும் அபாயம் இல்லை