செய்தி வெளியீடு


சீரற்ற வானிலை காரணமாக “MT New Diamond“ கப்பலில் மீண்டும் பரவிய தீ கட்டுக்குள் கொண்டு வர கூட்டு பேரழிவு மேலாண்மை குழு நடவடிக்கையைத் தொடர்கிறது

பாதகமான வானிலை காரணமாக MT New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ, இப்போது பேரழிவு முகாமைத்துவ குழுக்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாக, வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது., மேலும் தீயணைப்பு இரசாயன மற்றும் தண்ணீரை இங்கு பயன்படுத்துகின்றன.

இதற்கிடையில், கப்பலில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஒரு குறுகிய டீசல் எண்ணெய் இணைப்பு காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக, கப்பலின் பின்புறத்தில் உள்ள தீயைக் கட்டுப்படுத்த பேரழிவு குழுவினர் பயன்படுத்திய கடல் நீர் தொடர்ந்து கப்பலின் பின்புறத்தில் மற்றும் என்ஜின் பெட்டிகளில் குவிந்து வருவதால், கப்பல் அதன் இயல்பான நிலையில் இருந்து சற்று விலகியதுடன் கப்பலின் பயன்பாட்டிற்காக சேமிக்கப்பட்ட டீசல் கடல் நீரில் கலவையை ஏற்படுத்தியதாக நம்பப்படுகிறது. இருப்பினும், கப்பலின் கச்சா எண்ணெய் தொட்டிகளில் தீ பரவும் அல்லது கப்பலில் இருந்து கடலில் கசியும் அபாயம் இல்லை.

அதன் படி, மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய கடலோர காவல்படையின் டோர்னியர் விமானம் இன்று பிற்பகல் டீசல் எரிபொருள் இணைப்பு காணப்பட்ட பகுதிக்கு சென்று அப்பகுதியில் ஒரு சிறப்பு இரசாயனம் தெளித்தது. தெளிக்கப்பட்ட இந்த இரசாயனம் கடல் நீரில் கலந்த டீசலின் ரசாயன கலவையை மாற்றி இதனால் கடல் சூழலில் ஏற்படக்கூடிய தாக்கத்தை குறைக்கும்.

MT New Diamond கப்பலில் ஏற்பட்ட தீயினால் கடற்பரப்புக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஆராய மற்றும் தேவையான மாதிரிகள் சேகரிக்க கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை(MEPA), நரா நிறுவனம்(NARA), ருஹுணு பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று கப்பல் நிறுத்தப்பட்டுள்ள பகுதிக்கு சென்றுள்ளனர். அவர்கள் தேவையான மாதிரிகள் சேகரிக்கப்பட்டவுடன் மாதிரிகள் ஆய்வக சோதனைகளுக்காக கரைக்கு கொண்டு வரப்படும். இது தவிர, மேலும் விசாரணையை மேற்கொள்வதற்கு கூடுதல் விவரங்களைப் பெறுவதற்கான நோக்கத்துடன் நாராவின் கடல் ஆராய்ச்சி கப்பலொன்று அந்த பகுதிற்கு வர உள்ளது.

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட கப்பலில் இருந்து மீட்டு இலங்கை கடற்படை கப்பல் சிந்துரலவில் பாதுகாப்பாக தனிமைப்படுத்தப்பட்ட 20 பிலிப்பைன்ஸ் மற்றும் கிரேக்க உறுப்பினர்கள் இன்று ஹம்பன்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டனர். கடற்படை அவர்களை ஒரு தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்தது, மேலும் இந்து குழு உறுப்பினர்கள் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட கப்பல் தற்போது சங்கமங்கந்த பிரதேசத்தில் இருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் நிறுத்தி இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை மற்றும் பிற பங்குதாரர்களின் கப்பல்கள் மற்றும் டக் படகுகள் பேரழிவு மேலாண்மை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. மேலும், தற்போதைய பணிக்கு உதவுவதற்காக விமான உளவு நடவடிக்கைகளுக்காக விமானங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இலங்கை கடலோர காவல்படையின் கப்பல்கள் மற்றும் இலங்கை கடற்படையின் 4 வது படைப்பிரிவின் துரித தாக்குதல் படகுகளும் இந்த நடவடிக்கையில் வழங்கள் கப்பல்களாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன, இந்த நடவடிக்கைகளுக்காக தீவுக்கு வந்த வெளிநாட்டு மீட்பு மற்றும் பேரழிவு மேலாண்மை குழுக்களும் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர்.