சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் கடற்படையால் கைப்பற்றப்பட்டது

வட மத்திய மற்றும் வடக்கு கடற்படை கட்டளைகளில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஏராளமான மீனவர்களையும், மீன்பிடி சாதனங்களையும் கடற்படையால் கைப்பற்றப்பட்டது.

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் தலைமன்னார் வடக்கு கடல் பகுதியில், குடுஇரிப்பு கடல் பகுதியில் மற்றும் பல்லெமுனை பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கைகளின் போது தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 25 நபர்கள், 06 மீன்பிடி படகுகள், தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் 1750 கிலோ கிராம் மீன்கள் கைப்பற்றப்பட்டன. வன்காலே கடல் பகுதியில் நடத்தப்பட்ட மேலும் ஒரு சோதனை நடவடிக்கையின் போது, செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சட்டவிரோத நீர் முழ்கி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 05 மீனவர்கள், 2 மீன்பிடிப் படகுகள் மற்றும் பல சுழியோடி உபகரணங்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டது.

மேலும், வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கரைநகர் பழைய கசுரினா கடற்கரையில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கொலை செய்ய தடைசெய்யப்பட்டுள்ள இரண்டு கடலாமைகளை உயிருடன் முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற இரண்டு மீனவர்களையும் கடற்படை கைது செய்தது.

இவ்வாரு கைது செய்யப்பட்ட நபர்கள் 21 முதல் 60 வயதுடைய தலைமன்னார், மன்னார் மற்றும் காரைநகர் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மன்னார் உதவி இயக்குநர் மற்றும் மன்னார் மீன்வள ஆய்வாளரிடமும், ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.