சட்டவிரோதமாக இந்நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட சுமார் 520 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

மன்னார் முண்தலம்பிட்டி கடற்கரையில் 2020 செப்டம்பர் 16 ஆம் திகதி நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடல் வழியாக இந்நாட்டுக்கு கொண்டுவர முட்பட்ட சுமார் 520 கிலோ கிராமுக்கு மேற்பட்ட உலர்ந்த மஞ்சளுடன் மூன்று (03) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் மன்னார் முண்தலம்பிட்டி கடல் பகுதியில் நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடல் வழியாக இந்நாட்டுக்கு கொண்டு வர முட்பட்ட 12 உரைகளில் அடைக்கப்பட்டிருந்த 520 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் மூன்று (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர், அங்கு சந்தேக நபர்களுடன் ஒரு படகும் கடற்படை கைப்பற்றியது.

இவ்வாரு கைது செய்யப்பட்ட நபர்கள் 22 முதல் 55 வயதுக்குட்பட்ட பல்லெமுனை பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பின்னர், அவர்கள் அடம்பன் சுகாதார மருத்துவ அதிகாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். தற்போதைய COVID-19 தொற்று சூழ்நிலையில் சுகாதாரத் துறை வழங்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, குற்றம் சாட்டப்பட்டவர்கள், உலர்ந்த மஞ்சள் மற்றும் படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும்.