கடல் வழியாக இந்நாட்டிற்கு கடத்திவரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற 952 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படை உதவியுடன் கைப்பற்றப்பட்டது

கடற்படையினர் மற்றும் பொலிஸார் ஒருங்கினைந்து மன்னார், இருக்குளம்பிட்டி பகுதியில் 2020 செப்டம்பர் 28 ஆம் திகதி நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடல் வழியாக இந்நாட்டுக்கு கடத்திவரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற சுமார் 952 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் ஒரு (03) சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

மன்னார் இருக்குளம்பிட்டி பகுதியில் மன்னார் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவின் ஒத்துழைப்புடன் வட மத்திய கடற்படை கட்டளை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான வீடொன்று சோதனை செய்யப்பட்டதுடன் குறித்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட 31 பைகளில் 952 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் மீட்டுள்ளதோடு, சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த மஞ்சள் கடல் வழியாக இந்நாட்டிற்கு கடத்திவரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அதே பகுதியில் வசிக்கும் 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டார். குறித்த சந்தேகநபர் மற்றும் கைது செய்யப்பட்ட உலர்ந்த மஞ்சள் ஆகியவற்றை மேலதிக விசாரணைக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.