சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 28 நபர்கள் கடற்படையினரால் கைது

2020 செப்டம்பர் 30 ஆம் திகதி முதல் 2020 அக்டோபர் 14 ஆம் திகதி வரையிலான இரண்டு வார காலப்பகுதியில், வட மத்திய, கிழக்கு, வடக்கு மற்றும் மேற்கு கடற்படைக் கட்டளைகளில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 28 நபர்களை கடற்படையினர் கைது செய்தனர்.

அதன் படி, வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் தேவம்பிட்டி மற்றும் அச்சானகுளம் பகுதி கடலில் நடத்திய இரண்டு தனித்தனி நடவடிக்கைகளின் போது, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 07 நபர்கள், இரண்டு மீன்பிடிக் படகுகள் (02) மற்றும் இரண்டு மீன்பிடி வலைகள் (02) உட்பட பல மீன்பிடி பொருட்களை கைப்பற்றியது. இதற்கிடையில், தலைமன்னார், ஊருமலே பகுதியில், உரிமம் இல்லாமல் 18 கிலோகிராம் கடல் அட்டைகளை பிடித்த மற்றொரு நபரும் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்.

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் சல்பேஆரு மற்றும் திருகோணமலை கடல் பகுதியிலும் மட்டக்களப்பு கொடுவமட பகுதியிலும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 12 நபர்களையும், 03 டிங்கி படகுகளையும், 10 மீன்பிடி வலைகளையும் கைப்பற்றியது.

மேலும், வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர், குருநகர் படகுத்துறை கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் போது செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் கடல் அட்டைகளை பிடித்த 04 நபர்கள், ஒரு டிங்கி படகு, அவர்களால் பிடிக்கப்பட்ட 100 கடல் அட்டைகள் மற்றும் பிற மீன்பிடி பொருட்கள் பறிமுதல் செய்தனர். இது தவிர, அதே கடற்படை கட்டளையின் கடற்படையினர் காரைநகர், செய்நொர் படகுத்துறை கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் போது செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட 02 நபர்கள், ஒரு படகு மற்றும் ஒரு தடை செய்யப்பட்ட வலை பறிமுதல் செய்தனர்.

மேலும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி தியவண்ணா ஒயவில் மீன் பிடித்த இரண்டு நபர்கள் (02), ஒரு படகு, பிடிக்கப்பட்ட 12 கிலோகிராம் மீன் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலையொன்று மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், 19 முதல் 57 வயதுக்குட்பட்ட சிலாவத்துர, முலங்காவில், மன்னார், எரக்கண்டி, நிலாவேலி, கின்னியா, குருநகர், ஊர்காவற்துறை மற்றும் ராஜகிரிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். குறித்த சந்தேகநபர்கள், மீன்பிடி படகுகள், தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் பிற மீன்பிடி பொருட்களுடன் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்திடம், குச்சவேலி, குருநகர் மற்றும் ஊர்காவற்துறை மீன்வள ஆய்வாளர் அலுவலகத்திடம் மற்றும் பத்தரமுல்லை தேசிய மீன்வள மேம்பாட்டு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.