போதைப்பொருள் கொண்ட 04 சந்தேக நபர்கள் தெற்கு கடல் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது

காலி, தொடங்தூவ கடல் பகுதியில் 2020 டிசம்பர் 31 ஆம் திகதி கடற்படையினர் மேற்கொண்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது பல நாள் மீன்பிடி படகொன்றில் கடத்திக் கொண்டு இருந்த 05 கிலோ மற்றும் 945 கிராம் ஐஸ் போதைப்பொருள் (Crystal Methamphetamine), 2 கிலோ மற்றும் 47 கிராம் ஹெராயின் மற்றம் 03 கிராம் கேரள கஞ்சா ஆகியவற்றையுடன் பல நாள் மீன்பிடி படகும் நான்கு (04) சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

சமூகத்திலிருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை வலுப்படுத்தி கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதுக்காக இலங்கை கடற்படை அடிக்கடி நடவடிக்கைகள் மேற்கொள்கிறது. அதன் படி டிசம்பர் 31 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் காலி, தொடங்தூவ கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான பல நாள் மீன்பிடிப் படகொன்று சோதனை செய்யப்பட்டதுடன் அங்கு நுட்பமாக மறைக்கப்பட்டு கொண்டு சென்ற 05 கிலோ மற்றும் 945 கிராம் ஐஸ் போதைப்பொருள் (Crystal Methamphetamine), 2 கிலோ மற்றும் 47 கிராம் ஹெராயின் மற்றம் 03 கிராம் கேரள கஞ்சா ஆகியவற்றையுடன் பல நாள் மீன்பிடி படகும் நான்கு (04) சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

கோவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொண்டுள்ள இந்த சிறப்பு நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22 முதல் 29 வயதுக்குட்பட்ட மாதரை, பொத்துவில், நீர் கொழும்பு மற்றும் மஸ்கெலியா ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் குறித்த சந்தேகநபர்கள், போதைப்பொருள் மற்றும் பல நாள் மீன்பிடி படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஹிக்கடுவ பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், இலங்கை கடல் பகுதியில் நடக்கும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த கடற்படை தொடர்ந்து விழிப்புடன் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.