சட்டவிரோதமாக இந்நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட உலர்ந்த மஞ்சள் மற்றும் கிளைபோசேட் பொதியொன்று கடற்படையினரால் கைது

கல்பிட்டி தலுவ கடற்கரையில் கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 1340 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 80 கிலோகிராம் கிளைபோசேட் ஆகியவற்றுடன் மூன்று சந்தேக நபர்கள் இன்று (ஜனவரி 26, 2021) கைது செய்யப்பட்டனர்.

இலங்கை கடலில் மேற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் கடத்தல் உட்பட அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதன் படி கல்பிட்டி தலுவ கடற்கரையில் வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடற்கரைக்கு வந்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று சோதனை செய்யப்பட்டதுடன் அங்கு 1340 கிலோகிராம் எடையுள்ள 37 உலர்ந்த மஞ்சள் பைகள் மற்றும் தலா 100 கிராம் கிளைபோசேட் எனப்படும் ரசாயன உரங்களின் 800 பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இந்த பொருட்களுடன்; மோசடியில் ஈடுபட்ட 03 சந்தேக நபர்களும், அந்தபொருட்களை கடத்துவதுக்குப் பயன்படுத்தப்பட்ட டிங்கி படகும் கடற்படை காவலில் வைக்கப்பட்டது. இது தவிர, இந்த பொருட்களை கொண்டு செல்ல அங்கு இருந்ததாக நம்பப்படுகின்ற ஒரு லாரி வண்டியும் கடற்படையால் கைது செய்யப்பட்டது.

கோவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 35 முதல் 43 வயதிற்குட்பட்ட கல்பிட்டி பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர் மற்றும் உலர்ந்த மஞ்சள், கிளைபோசேட், டிங்கி படகு மற்றும் லாரி வண்டி ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.