பாதிக்கப்பட்ட மீன்பிடி படகொன்று கடற்படையால் மீட்பு

மன்னார் சவுத்பார் பகுதியில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகாக சென்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்திய கடல் பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்ட டிங்கி படகொன்று மற்றும் படகில் இருந்த 02 மீனவர்களை கொழும்பு, கடற்படை தலைமையகத்தில் நிறுவப்பட்ட கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மையத்தின் உதவியால் இன்று (2021 பிப்ரவரி 27) மீட்கப்பட்டது.

2021 பிப்ரவரி 23 ஆம் திகதி மன்னார் சவுத்பார் பகுதியில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகாக சென்ற மீன்பிடி படகொன்று (பதிவு எண் OFRP –A-950 MNR) 02 மீனவர்களுடன் காணாமல் போனதாகவும் குறித்த படகை கண்டுபிடிக்க கடற்படையின் உதவி கோரி மீன்வள மற்றும் நீர்வளத் திணைக்களம் கடற்படைக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, காணாமல் போன டிங்கி படகு மீன்பிடிக்க புறப்பட்ட கடல் பகுதியில் கடற்படை உடனடியாக ஒரு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதுடன் கொழும்பு கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மையம், காணாமல் போன படகை குறித்து இந்தியாவின் சென்னையில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மையத்திற்கு தெரிவித்துள்ளது. இந்த படகு சர்வதேச கடல் எல்லை (IMBL) ஊடாக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்துக்கு அடித்துச் செல்லப்பட்டிருந்த போது இந்திய கடலோர காவல்படை கப்பலொன்றால் கண்டுபிடிக்கப்பட்டதாக இந்தியாவின் சென்னையில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மையம் கொழும்பு கடற்படைத் தலைமையகத்தில் நிறுவப்பட்ட கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மையத்திக்கு தெரிவித்துள்ளது. பின்னர் டிங்கி படகும் அதன் மீனவர்களும் இந்திய கடலோர காவல்படை கப்பலொன்று மூலம் சர்வதேச கடல் எல்லைக்கு (IMBL) கொண்டு வரப்பட்ட பின் இன்று இலங்கை கடற்படையின் சுரனிமில கப்பல் மூலம் இந்திய கடலோர காவல்படை கப்பலில் இருந்து குறித்த டிங்கி படகு மற்றும் இரண்டு மீனவர்களையும் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வரப்பட்டது.

மேலும், கோவிட் 19 பரவாமல் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார ஆலோசனைகள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றி இந்த தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், கொழும்பு கடற்படை தலைமையகத்தில் நிறுவப்பட்ட கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மையம் இலங்கை தேடல் மற்றும் மீட்பு மண்டலத்தில் 2021 காலகட்டத்தில் மட்டும் 05 வணிகக் கப்பல்கள் மற்றும் 21 மீன்பிடிக் படகுகளை மீட்பதற்கு ஒருங்கிணைத்துள்ளது. அந்தக் காலகட்டத்தில் கடலில் ஏற்பட்ட பேரழிவுகள் மற்றும் நோய்களால் ஆபத்தில் இருந்த 25 மீனவர்களின் உயிரையும் மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.