சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வர முயன்ற 26 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள கடல் அட்டைகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை 2021 மார்ச் 09 ஆம் திகதி தலைமன்னார் கடற்கரையில் மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வர முயன்ற சுமார் 1189 கிலோ கிராம் உலர்ந்த கடல் அட்டைகளுடன் 04 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி மார்ச் 09 ஆம் திகதி தலைமன்னார் கடற்கரையில் வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான இரண்டு டிங்கி படகுகள் சோதனை செய்தனர். அப்போது குறித்த படகுகளில் இருந்து 24 பைகளில் அடைக்கப்பட்டுள்ள 1189 கிலோ மற்றும் 83 கிராம் உலர்ந்த கடல் அட்டைகளுடன் நான்கு சந்தேக நபர்கள் (04) கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்தப்பட்ட 02 டிங்கி படகுகளையும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

கடற்படையால் கைப்பற்றப்பட்ட உலர்ந்த கடல் அட்டைகளின் சந்தை விலை ரூ .26 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

கோவிட் 19 பரவுவதைத் தடுப்பதுக்காக வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 38 முதல் 58 வயதுக்குட்பட்ட கல்பிட்டி, சிலாவதுர மற்றும் நானட்டான் பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். இதற்கிடையில், கைது செய்யப்பட்ட நபர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்காக மன்னார் பொது சுகாதார ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கடற்படையினரால் கைது செய்யப்பட்ட உலர்ந்த கடல் அட்டைகள் மற்றும் டிங்கி படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்வள உதவி இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்குப் பிறகு, சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படுவார்கள்.