சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 05 இந்திய மீன்பிடி படகுகளுடன் 54 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 05 இந்திய மீன்பிடி படகுகளுடன் 54 இந்திய மீனவர்கள் 2021 மார்ச் 24 ஆம் திகதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை கடற்பரப்பில் வெளிநாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதால் ஏற்படும் பாதிப்பு மற்றும் இலங்கையின் மீன்வள வளங்களின் நிலைத்தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இலங்கை கடற்பரப்பில் நடைபெறுகின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்க கடற்படை பல ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர், யாழ்ப்பாணம் கோவிலன் பகுதியிலிருந்து 03 கடல் மைல்கள் அருகில் உள்ள கடல்பகுதில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒரு பெரிய இந்திய மீன்பிடிப் படகொன்று 14 இந்திய மீனவர்களுடன் கைது செய்தனர். இங்கு கைப்பற்றப்பட்ட படகு 280 குதிரைத்திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்ட 75 அடி நீளம் மற்றும் 22 அடி அகலமான இரும்பு தகடுகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட படகொன்றாக காணப்பட்டது. இதற்கிடையில், Trawling நுட்பத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 1030 கிலோ கிராம் மீன்கள் மற்றும் சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்தப்பட்ட மீன்பிடி பொருட்கள் ஆகியவை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

மேலும், மன்னார், பேசாலை பகுதிக்கு 07 கடல் மைல் தொலைவில் மற்றும் இரணைதீவுக்கு 05 கடல் மைல்கள் அருகில் இலங்கை கடற்பரப்பில் Trawling நுட்பத்தைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 02 இந்திய மீன்பிடிக் படகுகளை 20 மீனவர்களுடன் வட மத்திய கடற்படைக் கட்டளையின் கடற்படையினர் கைது செய்தனர்.

இதற்கிடையில், சர்வதேச கடல் எல்லையிலிருந்து 62 கடல் மைல் தொலைவில் இலங்கைக் கடலுக்குள் நுழைந்து முல்லைதீவு கடற்கரையில் இருந்து சுமார் 07.5 மற்றும் 08.5 கடல் மைல் தூரங்களில் Trawling நுட்பத்தைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மேலும், இரண்டு இந்திய மீன்பிடிக் படகுகளுடன் 20 இந்திய மீனவர்கள் மற்றும் பிற மீன்பிடி பொருட்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டன.

இலங்கை கடலுக்குள் வெளிநாட்டு மீனவர்கள் சட்டவிரோதமாக நுழைந்து, Bottom Trawling போன்ற தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்கின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளினால் மனித நுகர்வுக்கு தகுதியற்ற சிறிய மீன்களைப் பிடிப்படும். குறித்த காரணத்தினால் மீன்களின் உயிர்வாழ்விற்கும் அப்பகுதியின் இயற்கை கடல் சூழலுக்கும் கடுமையான அச்சுறுத்தலை அமைகிறது. இது வடக்கில் வாழும் சாதாரண இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்திலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த காலங்களில் இதுபோன்ற சட்டவிரோத மீன்பிடித்தல் பதிவாகியுள்ள சந்தர்ப்பங்களில் இந்திய அதிகாரிகளுக்கு அறிவிக்கவும் கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

கோவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்பு நடவடிக்கைகள் மூலம் கைப்பற்றப்பட்ட ஐந்து இந்திய மீன்பிடிப் படகுகள் மற்றும் 54 இந்திய மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.

மேலும், இலங்கை கடலில் சட்டவிரோத மீன்பிடித்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும், கடல் வளங்களைப் பாதுகாப்பதற்கும் கடற்படை தொடர்ந்து இதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.