ரூ .26 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கடற்படையின் உதவியுடன் கைது

இலங்கை கடற்படையினர் மன்னார் பொலிஸாருடன் இணைந்து இன்று (2021 ஏப்ரல் 18) முலங்காவில், முத்தலம்பிட்டி பகுதியில் சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதுடன், அங்கு 89 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று (03) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க கடற்படை ரோந்து நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் படி, இன்று மன்னார் காவல்துறையுடன் இணைந்து வட மத்திய கடற்படை கட்டளை நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது முலங்காவில், முத்தலம்பிட்டி பகுதியில் உள்ள சிப்பியாரு பாலம் அருகே சந்தேகத்திற்கிடமான லாரி ஒன்றை சோதனை செய்யப்பட்டதுடன், அங்கிருந்து ஐந்து சாக்குகளில் நிரப்பப்பட்ட 89 கிலோ கிராம் கேரளா கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடியில் ஈடுபட்ட மூன்று (03) சந்தேக நபர்கள் கேரள கஞ்சா மற்றும் லாரியுடன் கைது செய்யப்பட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சாவின் தெரு மதிப்பு ரூ. 26 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 26 முதல் 44 வயது வரையிலான வவுனியா மற்றும் நானட்டன் பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

கோவிட் 19 பரவுவதைத் தடுப்பதுக்காக வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட கஞ்சா, சந்தேக நபர்கள் மற்றும் லாரி ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.