சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்குள் நுழைய முயன்ற ஒருவருடன் கடத்தல்காரர்கள் கடற்படையினரால் கைது

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு விமானத்தில் சென்று மீண்டும் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக சிறிய படகொன்று மூலம் மன்னார் பகுதிக்கு வந்துக் கொண்டிருந்த ஒருவருடன் குறித்த படகில் இருந்த இருவர் மற்றும் இந்த கடத்தல் செயலில் ஈடுபட்ட மேலும் 02 சந்தேக நபர்களை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

சட்டவிரோதமான முறையில் இந்தியாவில் இருந்து வந்த சந்தேக நபர் யாழ்ப்பாணம் பகுதியில் வசிப்பவராகவும் அவர் இந்த நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட கப்பலில் இருந்த 02 கடத்தல்காரர்களும், இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்ட மற்ற 02 நபர்களும் மன்னார் பகுதியில் வசிப்பவர்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நபர்கள் அனைவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட பின் அப்பகுதியின் பொது சுகாதார ஆய்வாளர்கள் மூலம் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளால் கடல் எல்லைகள் வழியாக கோவிட் 19 நாட்டிற்குள் பரவுவதைத் தடுக்க கடற்படை தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.