ரூ .14 மில்லியனுக்கும் மேல் பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது

2021 மே 30 ஆம் திகதி பருத்தித்துறை கோட்டாடி கடற்கரை பகுதியில் நடத்திய சிறப்பு ரோந்துப் பணியின் போது, டிங்கி படகு ஒன்றில் மறைத்து வைத்திருந்த சுமார் 48 கிலோ மற்றும் 900 கிராம் கேரள கஞ்சாவை இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டது.

மே 30 ஆம் திகதி இரவு பருத்தித்துறை கோட்டாடி கடற்கரை பகுதியில் உள்ள முனியா மீன்பிடி கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்பு இரவு ரோந்துப் நடவடிக்கையின் போது கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று சோதனை செய்யப்பட்டதுடன் அங்கு பாலிதீன் பைகளில் நிரப்பி மறைத்து வைத்திருந்த சுமார் 48 கிலோ மற்றும் 900 கிராம் கேரள கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கடற்படை நடவடிக்கை காரணத்தினால் தப்பி ஓடிய இந்த மோசடியில் ஈடுபட்ட நபர்களுக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சம்பவ இடத்தில் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், இந்த கேரள கஞ்சாவின் தெரு மதிப்பு சுமார் ரூ 14 மில்லியன் என்று நம்பப்படுகிறது.

கோவிட் 19 பரவுவதைத் தடுப்பதுக்காக வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மேலதிக விசாரணைகளுக்காக பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.