ரூ .08 மில்லியனுக்கும் மேல் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 02 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது

2021 ஜூன் 01 ஆம் திகதி மன்னாருக்கு வடக்கு கடல் பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு ரோந்துப் நடவடிக்கையின் போது, சுமார் 29 கிலோ மற்றும் 800 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு டிங்கி படகு மற்றும் இரு சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

2021 ஜுன் 01 ஆம் திகதி பிற்பகலில் மன்னாருக்கு வடக்கு கடல் பகுதியில் கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்பு ரோந்துப் நடவடிக்கையின் போது கரையை நோக்கி பயணித்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று சோதனை செய்யப்பட்டதுடன் அங்கு 02 பைகளில் 14 பார்சல்களாக வைத்திருந்த சுமார் 29 கிலோ மற்றும் 800 கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த டிங்கி படகு மற்றும் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இந்த கேரள கஞ்சாவின் தெரு மதிப்பு சுமார் ரூ 08 மில்லியனுக்கும் மேல் என்று நம்பப்படுகிறது.

கோவிட் 19 பரவுவதைத் தடுப்பதுக்காக வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட 02 சந்தேக நபர்களும் மன்னார் இருக்கலம்பிட்டி பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள், கேரள கஞ்சா பொதிகள் மற்றும் டிங்கி படகு மேலதிக விசாரணைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.