MV X-PRESS PEARL கப்பலின் கசிவுகள் தொடர்பில் கடற்படையின் சுழியோடிகள் சிறப்பு ஆய்வு

தீ அனர்த்தத்திற்கு உள்ளான MV X-PRESS PEARL கப்பலில் ஏதேனும் கசிவுகள் ஏற்படுகின்றதா என்பது தொடர்பான ஆய்வு நடவடிக்கைகளில் கடற்படையின் அனுபவம் வாய்ந்த சுழியோடிகள் இன்று (2021 ஜூன் 06) ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, MV X-PRESS PEARL கப்பலின் நீரில் மூழ்கிய பகுதியில் உள்ள எரிபொருள் தொட்டிகள் மூலம் கடலுக்கு ஏதேனும் கசிவுகள் ஏற்படுகின்றதா என்பது தொடர்பான ஆய்வுகள் இந்த சிறப்பு சுழியோடி நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்டது. நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அப்பகுதியில் உள்ள நீரோட்டங்களின் வலிமை காரணமாக கடலில் நிலவும் கரடுமுரடான அலைகள் மற்றும் குறைந்த தெரிவுநிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சுழியோடி குழு இந்த நடவடிக்கையை மிகுந்த முனைப்புடன் மேற்கொண்டது.

மேலும் இவர்கள் நாளைய தினம் (ஜூன், 07) தீ பிடித்த கப்பலிலிருந்து எண்ணெய் கசிவுகள் ஏதாவது ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய நீர் மாதிரிகள் மற்றும் கடற்சூழல் என்பவற்றை ஆராய உள்ளனர்.