சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்த முயன்ற பீடி இலைகள் மற்றும் உலர்ந்த மஞ்சளுடன் ஒருவர் கடற்படையினரால் கைது

மன்னார், வங்காலை கடற்கரை பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்த முயன்ற 514 கிலோகிராம் பீடி இலைகள் (Kendu Leaves) மற்றும் சுமார் 70 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளுடன் சந்தேக நபர் ஒருவர் (01) இன்று (ஜூன் 08, 2021). கைது செய்யப்பட்டார்.

சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடற்படை தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் தொடர்ந்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் இன்று (ஜூன் 08) மன்னார், வங்காலை கடற்கரை பகுதியில் சிறப்பு சோதனை நடவடிக்கை யொன்று மேற்கொண்டுள்ளதுடன் கடல் வழியாக கடத்தி கடற்கரை அருகிலுள்ள புதர்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 514 கிலோகிராம் பீடி இலைகள் (Kendu Leaves) மற்றும் சுமார் 70 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் பொதிகளுடன் ஒரு சந்தேக நபர் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்.

கோவிட் 19 பரவுவதைத் தடுப்பதுக்காக வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எருக்குளம்பிட்டி பகுதியில் வசிக்கும் 41 வயதானவர் என அடையாளம் காணப்பட்டார், குறித்த சந்தேகநபர், பீடி இலைகள் மற்றும் உலர்ந்த மஞ்சள் ஆகியவற்றை மேலதிக விசாரணைகளுக்காக வங்காலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.