சுமார் ரூ .39 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 02 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது

ஊர்காவற்துறை, கரம்பன் கடற்கரை பகுதியில் மேற்கொண்டுள்ள சிறப்பு ரோந்துப் நடவடிக்கையின் போது, சுமார் 130 கிலோ 760 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு டிங்கி படகு மற்றும் இரண்டு (02) சந்தேக நபர்கள் 2021 ஜூன் 17 அன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி 2021 ஜூன் 17 இரவு வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, கரம்பன் கடற்கரைக்கு வந்தடைந்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று சோதனை செய்யப்பட்டதுடன் அங்கு இருந்து கேரள கஞ்சா கொண்ட நான்கு பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன்படி, டிங்கி படகும் இரண்டு சந்தேக நபர்களும் (02) கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட இந்த கேரள கஞ்சாவின் தெரு மதிப்பு சுமார் ரூ 39 மில்லியன் என்று நம்பப்படுகிறது.

கொவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 26 மற்றும் 31 வயதுக்குட்பட்ட பேசாலை மற்றும் ஊர்காவற்துறை பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.