கடலில் காயமடைந்த்த மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படையின் உதவி

திருகோணமலையில் இருந்து சுமார் 30 கடல் மைல் (சுமார் 55 கி.மீ) தூரத்தில் கிழக்கு பகுதி கடலில் நடைபெற்ற விபத்தொன்றால் காயமடைந்த இலங்கை பல நாள் மீன்பிடி படகொன்றில் மீனவரை சிகிச்சைக்காக கரக்கு கொண்டு வந்து உடனடி சிகிச்சைக்காக அனுப்ப கடற்படை இன்று (2021 செப்டம்பர் 26) நடவடிக்கை எடுத்துள்ளது.

2021 செப்டம்பர் 19 அன்று அம்பலங்கொடை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற பல நாள் மீன்பிடி படகான 'சுது ருவன் 3' என்ற படகில் இருந்த ஒரு மீனவர் படகில் விழுந்தது காயமடைந்த்தாக மீன்வள மற்றும் நீர்வளத் திணைக்களம் கடற்படை தலைமையகத்தில் உள்ள கடல்சார் மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்திற்கு தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த அறிவிப்புக்கு உடனடியாக பதிலளித்த கடற்படை காயமடைந்த மீனவரை சிகிச்சைக்காக அழைத்து வர கிழக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட 4 வது வேகப்பிரிவு ரோந்து படையின் P4444 படகு அனுப்பியது. காயமடைந்த மீனவரை துரித தாக்குதல் படகு மூலம் மீட்கப்பட்ட பிறகு, முதலுதவி அளிக்கப்பட்டு, அவர் திருகோணமலை துறைமுகம் அருகிக்கு கொண்டு செல்லப்பட்டு கடலோர காவல்படையின் சிஜி 210 கப்பல் வழியாக திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டார். அதன் பின் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இலங்கை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மண்டலத்தில் பாதிக்கப்பட்டும் கடற்சார் மற்றும் மீன்பிடி சமூகங்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை எப்போதும் தயாராக உள்ளது.