நடவடிக்கை செய்தி

75 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இரு சந்தேகநபர்கள் நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்

இலங்கை கடற்படையினர் இன்று (31 மார்ச் 2022) நீர்கொழும்பு, துவ களப்பு பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது சுமார் 249 கிலோ 900 கிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர். மெலும், இந்த நடவடிக்கையின் மூலம் சிறிய கார் ஒன்று மற்றும் மோசடியில் ஈடுபட்ட 02 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

31 Mar 2022

சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை வடகடலில் கைப்பற்றப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம், கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு வடக்கே உள்ள கடற்பகுதியில் இன்று (2022 மார்ச் 31) இலங்கை கடலோர காவல்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 66 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகத்திற்குரிய மூன்று பேர் (03) மற்றும் ஒரு டிங்கி (01) படகு கைது செய்தனர்.

31 Mar 2022

வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மேலும் ஒரு இந்திய மின்பிடி படகு கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் காரைநகர் கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு வடமேற்கே உள்ள இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட பல இந்திய மின்பிடி படகுகள் விரட்டுவதற்காக இலங்கை கடற்படையினர் 2022 மார்ச் 30 ஆம் திகதி இரவு விசேட நடவடிக்கையை மேற்கொண்டனர். மேலும், இந்த நடவடிக்கையின் போது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீனவர்களுடன் இந்திய மின்பிடி படகு ஒன்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

31 Mar 2022

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்த முயன்ற உலர்ந்த மஞ்சள், ஏலக்காய் மற்றும் விவசாய இரசாயனப் பொருட்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை தீவின் அல்லப்பிட்டி பகுதிக்கு அப்பால் கடற்பரப்பில் இன்று (2022 மார்ச் 30) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்த முயன்ற 1828 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள், 137 கிலோகிராம் ஏலக்காய் மற்றும் 134 விவசாய இரசாயனப் போத்தல்கள் ஆகியவற்றையுன் ஒரு சந்தேக நபர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்.

30 Mar 2022

வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மின்பிடி படகொன்று கடற்படையினரால் கைது

நெடுந்தீவுக்கு தெற்கு கடற்பகுதியில் 2022 மார்ச் 28 ஆம் திகதி இரவு மேற்கொண்ட ரோந்துப் பணியின் போது இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒரு மீன்பிடி படகுடன் நான்கு (04) இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

29 Mar 2022

பொல்பித்திகம, மாஎலிய பகுதியில் ஏற்பட்ட திடீர் தீயை கட்டுப்படுத்த கடற்படையின் உதவி

பொல்பிதிகம மாஎலிய பிரதேசத்தில் உள்ள திகிலிய மலை வனச்சரகத்தில் 2022 மார்ச் 27 ஆம் திகதி இரவு ஏற்பட்ட திடீர் தீயை அணைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது (2022 மார்ச் 28) தீ மற்ற பகுதிகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தும் பணியில் கடற்படை தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

29 Mar 2022

1418 கிலோகிராம் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் சந்தேகநபர் ஒருவர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார்

இலங்கை காவல்துறைனருடன் இணைந்து இலங்கை கடற்படையினர் 2022 மார்ச் 27 ஆம் திகதி மன்னார் உப்புக்குளம் பகுதியில் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1418 கிலோகிராம் தடைசெய்யப்பட்ட வலைகளுடன் (Monofilament Nets) சந்தேகநபர் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

28 Mar 2022

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய மின்பிடி படகுகள் கடற்படையினரால் கைது

2022 மார்ச் 23 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய மின்பிடி படகுகளுடன் 16 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

24 Mar 2022

பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பாய்மர படகுக்காக கடற்படையின் உதவி

ஹம்பாந்தோட்டை பகுதிக்கு அப்பால் தெற்கு கடற்பகுதியில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பாய்மரப் படகொன்றை பாதுகாப்பாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வர 2022 மார்ச் 22 ஆம் திகதி கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

23 Mar 2022

வணிக வெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் திருகோணமலையில் கைது

திருகோணமலை இரணைகேணி பகுதியில் 2022 மார்ச் 21 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட 20 வாட்டர் ஜெல் குச்சிகள் (Water Gel) மற்றும் 25 மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள் ஆகியவையுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

22 Mar 2022