இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய மின்பிடி படகுகள் கடற்படையினரால் கைது

2022 மார்ச் 23 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய மின்பிடி படகுகளுடன் 16 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாட்டு மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதால் உள்ளூர் மீனவ சமூகத்துக்கு ஏற்படுகின்ற தாக்கம் மற்றும் இலங்கையின் மீன்பிடி வளங்களின் நிலைத்தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கடற்படை சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, வடக்கு மற்றும் வடமத்திய கடற்படைக் கட்டளைகளுடன் இணைக்கப்பட்டுள்ள 4ஆவது விரைவுத் தாக்குதல் படையணியின் விரைவுத் தாக்குதல் படகுகள் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்பு ரோந்து நடவடிக்கைகளின் போது யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு வட மெற்கு பகுதியில் மற்றும் மன்னார், இரணைதீவுக்கு வடமேற்கு இலங்கைக் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட ரோந்துப் பணிகளின் போது இவ்வாறு, சர்வதேச கடல் எல்லை மீறி (IMBL) இலங்கை கடற்பரப்பில் Bottom Trawling முரையில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ள 16 இந்திய மீனவர்களுடன் 02 இந்திய மீன்பிடி படகுகளை கைப்பற்றினர். இந்த மீன்பிடி முறையால் பிடிக்கப்பட்ட மீன்கள் ஒருதொகையையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்பு நடவடிக்கை மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடி படகுகள் மற்றும் மீனவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.