வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மின்பிடி படகொன்று கடற்படையினரால் கைது

நெடுந்தீவுக்கு தெற்கு கடற்பகுதியில் 2022 மார்ச் 28 ஆம் திகதி இரவு மேற்கொண்ட ரோந்துப் பணியின் போது இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒரு மீன்பிடி படகுடன் நான்கு (04) இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாட்டு மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதால் உள்ளூர் மீனவ சமூகத்துக்கு ஏற்படுகின்ற தாக்கம் மற்றும் இலங்கையின் மீன்பிடி வளங்களின் நிலைத்தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கடற்படை சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் படி, வடக்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட 4 வது விரைவு தாக்குதல் படைப்பிரிவுக்கு சொந்தமான விரைவு தாக்குதல் படகொன்று நெடுந்தீவுக்கு தெற்கு கடற்பகுதியில் மேற்கொண்ட ரொந்து நடவடிக்கையின் போது, சர்வதேச கடல் எல்லை மீறி இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோதமான bottom trawling முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட ஒரு இந்திய மின்பிடி படகுடன் 04 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளது.

இந்த நடவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடி படகு மற்றும் இந்திய மீனவர்கள் இலங்கை கடலோர காவல்படையினரால் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகர் அலுவலகத்திற்கு ஒப்படைக்க காங்கேசன்துறை மைலடி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

மேலும், 2022 மார்ச் 23 ஆம் திகதி யாழ்ப்பாணம், நெடுந்தீவின் வடமேற்கு மற்றும் மன்னார், இரணைதீவின் வடமேற்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்களையும் இரண்டு இந்திய மின்பிடி படகுகளையும் கடற்படையினர் கைது செய்தனர். இலங்கையின் கடற்றொழில் மற்றும் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடற்படையினர் இலங்கை கடற்பரப்பில் தொடர்ந்து ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.