மீன்பிடிக்க தயார்படுத்தப்பட்ட வெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் திருகோணமலையில் கைது

2022 ஏப்ரல் 23 ஆம் திகதி திருகோணமலை சல்லிமுனை கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் வாட்டர் ஜெல் (Water Gel) வர்த்தக வெடிமருந்துகளை பயன்படுத்தி தயார்படுத்தப்பட்ட 08 வெடிபொருட்களின் பாகங்கள், 07 மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள் மற்றும் 2.5 அங்குல நீளமுள்ள 07 பாதுகாப்பு உருகிகள் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படை கப்பல் வலகம்பா நிறுவனத்தின் கடற்படையினர் 2022 ஏப்ரல் 23 ஆம் திகதி திருகோணமலை சல்லிமுனை கடற்கரையில் மேற்கொண்டுள்ள இந்த சிறப்பு ரோந்து நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை சோதனை செய்தனர் அப்போது சந்தேகநபரிடம் இருந்து வர்த்தக வெடிமருந்துகளை பயன்படுத்தி தயார்படுத்தப்பட்ட 08 வெடிபொருட்களின் பாகங்கள், 07 மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள் மற்றும் 2.5 அங்குல நீளமுள்ள 07 பாதுகாப்பு உருகிகள் கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த வெடிபொருட்கள் சட்டவிரோதமான மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்துவதற்காக தயார்செய்யப்பட்ட வெடிபொருட்கள் என நம்பப்படுகிறது.

மேலும், கடற்றொழில் சமூகத்தைச் சேர்ந்த மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மீனவர்களால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடித் தொழிலின் காரணமாக கடல்சார் சூழலுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்தும் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாரு கைது செய்யப்ட்ட சந்தேகநபர் திருகோணமலை, குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக குச்சவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.