சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படை நிவாரணக் குழுக்கள் தொடர்ந்து நிவாரணங்களை வழங்கி வருகின்றன

மேற்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கை கடற்படையினர் இன்று (ஜூன் 01, 2022) 13 நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளனர். அதன்படி, கடற்படையின் நிவாரணக் குழுக்கள் தற்போது அந்தந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவ செயல்பட்டு வருகின்றன.

அதன்படி, களுத்துறை மாவட்டத்தில் புலத்சிங்கள, பரகொட பிரதேசங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்தில் அயகம பிரதேசத்திலும் பாடசாலை மாணவர்கள் உட்பட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாள் முழுவதும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன் மேலும், கடும் மழை காரணமாக காலி, தவலமவில் வீதிக்கு குறுக்கே விழுந்த மரமொன்றை அகற்றும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளன.

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க மேற்கு கடற்படை கட்டளையின் 23 நிவாரண குழுக்களும், தெற்கு கடற்படை கட்டளையின் 05 நிவாரண குழுக்களும், வடமேற்கு கடற்படை கட்டளையின் 10 நிவாரண குழுக்களும் தயார் நிலையில் உள்ளன.