சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற பீடி இலைகள் கடற்படையினரால் கைது

சிலாவத்துறை, கொண்டச்சிக்குடா கடற்கரை பகுதியில் 2022 ஜூன் 16 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் நடத்திய விசேட ரோந்து நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற சுமார் 490 கிலோ கிராம் பீடி இலைகள் (Kendu Leaves) கைப்பற்றினர்.

கடல் வழியாக மெற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த கடற்படை பல ரோந்துப் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தேரபுத்த நிறுவனத்தின் கடற்படையினர் 2022 ஜூன் 16 ஆம் திகதி இரவு கொண்டச்சிக்குடா கடற்கரை பகுதியில் மேற்கொண்ட விசேட ரோந்து நடவடிக்கையில் போது, சந்தேகத்திற்கிடமான வகையில் கரையோரத்தை வந்தடைந்த டிங்கி படகு ஒன்றை ஆய்வு செய்துள்ளதுடன் குறித்த படகுக்குள் 16 சாக்கு மூட்டைகளில் கடத்த முயன்ற சுமார் 490 கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் ஒரு டிங்கி படகுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்துள்ளனர்.

இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 29 மற்றும் 42 வயதுடைய மன்னார் பேசாலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.