சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 47 பேர் கடற்படையினரால் கைது

இலங்கையின் மேற்கு கடற்பரப்பில் இன்று (2022 ஜூன் 27) இரவு மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 47 பேர் கொண்ட மீன்பிடி படகொன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை கப்பல் நந்திமித்ர இன்று (2022 ஜூன் 27) இரவு நீர்கொழும்புக்கு அப்பால் மேற்கு கடற்கரையில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமான இலங்கையின் பல நாள் மீன்பிடிக் கப்பலொன்றை அவதானித்து சோதனையிட்டனர். அப்போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் மோசடியில் ஈடுபட்ட 5 பேர் (05) உட்பட 34 ஆண்கள், 06 பெண்கள் மற்றும் 07 குழந்தைகள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

01 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வென்னப்புவ, நாத்தாண்டி, சிலாபம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

ஆட்கடத்தல்காரர்களால் மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாறான ஆள் கடத்தலில் சிக்கி சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்து சட்டத்தின் முன் சிக்குவதை தவிர்க்குமாறு கடற்படை பொதுமக்களிடம் கோருகிறது. மேலும், பழமையான மற்றும் நீண்ட கடல் பயணத்திற்குப் பொருத்தமற்ற பல நாள் மீன்பிடிக் கப்பல்கள் தொடர்ந்தும் இவ்வாறான மனித கடத்தலுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும், அவ்வாறான கப்பல்கள் சட்டவிரோதக் குடியேற்றத்தை மேற்கொள்ள முற்பட்டால் அவர்களின் உயிருக்குப் பெரும் ஆபத்து ஏற்படும் எனவும் கடற்படை பொதுமக்களை எச்சரித்துள்ளது.