சுமார் 33 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

இலங்கை கடற்படையினர் இன்று (2022 ஜூலை 10) மற்றும் 2022 ஜூலை 09 ஆம் திகதி மணல்மேடு மற்றும் ஊறுமலை கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 113 கிலோ 280 கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.

கடல் வழியாக மெற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த கடற்படை பல ரோந்துப் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, வடமத்திய கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் தம்மன்னா நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட சிறப்பு படகுகள் படை மற்றும் மரைன் படையின் கடற்படையினரால் இன்று (2022 ஜூலை 10) மன்னார் மணல்மேடு மற்றும் ஊறுமலை கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட ரோந்துப் பணிகளின் போது, மணல் கரை கடற்கரைகளில் குவிக்கப்பட்டிருந்த சுமார் 105 கிலோ (ஈரமான எடை) கேரள கஞ்சா 24 பொதிகளிலும், ஊருமலை கடற்கரைகளில் குவிக்கப்பட்டிருந்த 04 கிலோகிராம் (ஈரமான எடை) எடையுள்ள மற்றுமொரு கேரள கஞ்சா பொதியும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், இலங்கை கடற்படைக் கப்பல் தம்மன்னா நிருவனத்துடன் இணைக்கப்பட்ட கடலோர ரோந்து படகொன்றின் கடற்படையினர் 2022 ஜூலை மாதம் 09 ஆம் திகதி மன்னார் மணல் கரையில் நடத்திய ரோந்துப் பணியின் போது கடலில் மிதந்த சுமார் 04 கிலோ 280 கிராம் (ஈரமான எடை) எடையுள்ள கேரள கஞ்சா பொதியொன்று கைப்பற்றப்பட்டுள்ளன.

கடற்படையினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் ரோந்து நடவடிக்கைகளின் காரணமாக கடத்தல்காரர்கள் இந்த பொருட்களைக் கரைக்குக் கொண்டுவர முடியாமல் கடலில் கைவிட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்த கேரள கஞ்சாவின் மொத்த தெரு மதிப்பு சுமார் ரூ. 33 மில்லியன் என நம்பப்படுகிறது.

மேலும், இந்த கேரள கஞ்சாவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கும் வரை கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.