சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 78 பேர் கடற்படையினரால் கைது

மட்டக்களப்பு கடற்பகுதியிலும் மட்டக்களப்பு களுவன்கேணி கடற்கரை பகுதியிலும் 2022 ஜூலை மாதம் 10 ஆம் திகதி இரவு மேற்கொன்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 78 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கிழக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட நான்காவது விரைவு தாக்குதல் படகுகள் படைக்கு சொந்தமான P 491 விரைவு தாக்குதல் படகின் கடற்படையினர் 2022 ஜூலை 10 ஆம் திகதி இரவு மட்டக்களப்பு கடற்பகுதியில் தேடுதல் நடவடிக்கையின் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமான இலங்கையின் பல நாள் மீன்பிடிக் கப்பலொன்றை அவதானித்து சோதனையிட்டனர். அப்போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இலங்கையில் இருந்து வெளிநாட்டிற்கு வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் குறித்த மோசடியில் ஈடுபட்ட ஆறு (06) பேர் உட்பட 43 ஆண்கள், 07 பெண்கள் மற்றும் 11 குழந்தைகள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்களில் 21 பேர் இன்று (2022 ஜூலை 11) காலை கடற்படையின் விரைவுத் தாக்குதல் படகொன்று மூலம் திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன், ஏனைய 40 பேருடன் பல நாள் மீன்பிடிக் கப்பல் தற்போது திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டுவரப்படுகின்றன. மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

மேலும், மேற்கண்ட பல நாள் மீன்பிடி கப்பல் மூலம் வெளிநாட்டிற்கு செல்ல தயாராகி மட்டக்களப்பு களுவன்கேணி கடற்கரைப் பகுதியில் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படுகின்ற 16 ஆண்கள் மற்றும் ஒரு (01) பெண் உட்பட 22 முதல் 50 வயதுக்குட்பட்ட 17 பேருடன் வேன் வண்டியொன்று இலங்கை கடற்படை கப்பல் காஷ்யப நிருவனத்தின் கடற்படையினர் மற்றும் மட்டக்களப்பு கலவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினர் இணைந்து 2022 ஜூலை 10 ஆம் திகதி இரவு களுவன்கேணி கடற்கரைப் பகுதியில் கைது செய்துள்ளனர்.

இதன்படி, மட்டக்களப்பு களுவன்கேணி கடற்கரைப் பகுதியில் கைது செய்யப்பட்ட 17 பேர் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் குறித்த சந்தேகநபர்கள் வேனுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும், பணம் சம்பாதிப்பதற்காக பாதுகாப்பற்ற கப்பல்களை பயன்படுத்தி கடத்தல்காரர்களால் நடத்தப்படும் மனித கடத்தலில் சிக்கி, இந்த நாட்டில் இருந்து சட்டவிரோதமாக இடம்பெயர முயற்சிப்பதன் மூலம், தங்கள் உயிரை பணயம் வைத்து சட்டத்தின் முன் தண்டனை பெறுவதை தவிர்க்குமாறு கடற்படை பொதுமக்களிடம் கேட்டுக் கொள்கிறது.