சுமார் 19 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

இலங்கை கடற்படையினர் 2022 ஜூலை 14 ஆம் திகதி மற்றும் இன்று (2022 ஜூலை 15) யாழ்ப்பாணம், மண்டைதீவு, சம்பக்குளம் கடற்கரை, கல்முனை துடுவ கடற்கரை மற்றும் ஊர்காவற்துறை அல்லப்பிட்டி கடற்கரை ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கைகளின் போது சுமார் 65 கிலோ கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.

கடல் வழியாக மெற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த கடற்படை பல ரோந்துப் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல்கள் வேலுசுமண நிறுவனத்தின் கடற்படையினர் யாழ்ப்பாணம், மண்டைதீவு, சம்பக்குளம் கடற்கரை மற்றும் கல்முனை துடுவ கடற்கரையில் 2022 ஜூலை 14 ஆம் திகதி மற்றும் இன்று (2022 ஜூலை 15) நடத்தப்பட்ட ரோந்து நடவடிக்கைகளின் போது கடற்கரையில் கரை ஒதுங்கிய 10 பொதிகளில் இருந்த கேரள கஞ்சாவை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் சுமார் 50 கிலோ மற்றும் 900 கிராம் (ஈரமான எடை) எடையுள்ளன.

மேலும், வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் கஞ்சதேவ நிருவனத்தின் கடற்படையினர் 2022 ஜூலை 14 ஆம் திகதி மற்றும் இன்று (2022 ஜூலை 15) யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை தீவின் ஆலப்பிட்டி கடற்கரையில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது கடற்கரையில் குவிக்கப்பட்டிருந்த 14 கிலோ மற்றும் 480 கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.

கடற்படை நடவடிக்கை காரணமாக இந்த கேரள கஞ்சாவை நிலத்திற்கு கொண்டு வர முடியாமல் கடத்தல்காரர்கள் கைவிட்டு சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது, மேலும் இந்த கேரள கஞ்சாவின் மொத்த தெரு மதிப்பு 19 மில்லியன் ரூபாய்க்கு மேல் இருக்கும் என நம்பப்படுகிறது.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படையினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளது.