சுமார் 14 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

இலங்கை கடற்படையினர் 2022 ஆகஸ்ட் 02 ஆம் திகதி மாலை மன்னார் மனல்பாறை பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 47 கிலோ மற்றும் 240 கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.

வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் தம்மன்னா நிருவனத்தின் கடற்படையினர் 2022 ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி மனல்பாறையை சுற்றியுள்ள பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கடத்தல்காரர்களால் புதைக்கப்பட்ட 47 கிலோ மற்றும் 240 கிராம் கேரள கஞ்சா பத்தொன்பது (19) பார்சல்கள் இவ்வாரு கைது செய்யப்பட்டது.

கடற்படையின் நடவடிக்கைகள் காரணமாக குறித்த கேரள கஞ்சாவை நாட்டிற்கு கொண்டு வர முடியாமல் கடத்தல்காரர்களால் இவ்வாரு மறைத்து வைத்திருந்ததாக நம்பப்படுகிறது.

மேலும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த தெரு மதிப்பு 14 மில்லியன் ரூபாவுக்கு மேல் இருக்கும் என நம்பப்படுகிறது. கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படையினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளது.